பிரிந்து சென்ற மனைவியை வெடிகுண்டுடன் கட்டிப்பிடித்த கணவன், அதனை வெடிக்கச் செய்த நிலையில் கணவன் - மனைவி இருவரும் வெடித்துச்  சிதறிய சம்பவம் நெஞ்சை பதைபதைக்கச் செய்து உள்ளது.

குஜராத் மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

குஜராத் மாநிலத்தில் 6 வது மாவட்டத்தில் உள்ளது மெஹராஜ் நகர் பகுதியில் வசித்து வரும் லாலாபாகி என்பவர், அந்த பகுதியில் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.

இவர், கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதியைச் சேர்ந்த சாராபென் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இப்படியான சூழலில் இந்த தம்பதிக்கு, ஒரு மகன் உள்ளார். அந்த மகன், அங்குள்ள ஒரு பள்ளியில் படித்து வருகிறார்.  

இந்த சூழலில் தான், கணவன் - மனைவிக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு, தகராறு வந்துக்கொண்டே இருந்தது.

இதே போல் தான், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக எப்போதும் போல் கணவன் - மனைவி இருவருக்கும் இடையே சண்டை வந்து, அவர்களுக்குள் தகராறு அதிகமானதால், கணவரிடம் சண்டை போட்டுவிட்டு, தனது அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார் அவரது மனைவி சாராபெண்.  

அப்போது, அவரது கணவனும் கடும் கோபத்தில் இருந்ததால், “மனைவி, போனால் போகட்டும்” என்று, நினைத்துக்கொண்டு, லாலாபாகி தனியாகவே வாழ்ந்து வந்திருக்கிறார்.

இப்படியாககவே, ஒரு மாதம் கடந்த நிலையில் கணவன் லாலாபாகி, மனம் இறங்கி வந்து தனது மனைவியை அவரது அம்மா வீட்டிற்கு தேடிச் சென்று, “மீண்டும் குடும்பம் நடத்த வருமாறு” தனது மனைவியை அவர் அழைத்திருக்கிறார். 

ஆனால், அவர் குடும்பம் நடத்த வர மறுப்பு தெரிவித்து இருக்கிறார். அப்போது, மனைவி லாலாபாகிபென்னும் அவரது குடும்பத்தினரும் அந்த கணவனை மிக கடுமையாக திட்டி, அவரை அங்கிருந்து விரட்டி உள்ளனர். இதனால், அவர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்.

இதனையடுத்து, அடுத்த சில நாட்கள் கழித்து, மீண்டும் சென்று குடும்பம் நடத்த தனது மனைவியை அழைத்து உள்ளார். அப்போது, அவரது மனைவி சாரா பெண்ணும் அவரது குடும்பத்தினரும் சேர்ந்து லாலாபாகியை கடுமையாகத் தாக்கி உள்ளனர். 

இதனால், மன ரீதியாகவும் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட கணவன் லாலாபாகி, தனது மனைவியை கொலை செய்ய திட்டமிட்டார்.

இதற்காகவே, தன் உயிரையும் இழக்க தயாராகி முடிவு செய்திருந்த அவர், இதற்காக மனித வெடிகுண்டாக அவர் மாறி இருக்கிறார்.

அதன்படி, கடையில் இருந்து வாங்கிய ஜெலட்டின் குச்சிகளை தனது இடுப்பை சுற்றி கட்டி உள்ளார். பின்னர், அதனை பேட்டரி மூலம் வயர் இணைப்பு கொடுத்து வைத்துக் கொண்டு அதன் மேல் சட்டையை போட்டுக் கொண்டு, தன் மனைவியைப் பார்க்க அவரது அம்மா வீட்டிற்கு சென்று உள்ளார்.

அங்கு, தனது மனைவி சாராபென்னை மீண்டும் குடும்பம் நடத்த வருமாறு எவ்வளவோ கெஞ்சிப் பார்த்திருக்கிறரா். அதற்கு, சாராபென் பிடிவாதமாக “நான் உன்னுடன் வாழ விரும்பவில்லை” என்று, திட்டவட்டமாக கூறியிருக்கிறார். இதனால், கடும் ஆத்திரமரடைந்த அவர், ஒரு கட்டத்தில் தனமு மனைவியை கட்டி பிடித்து இருக்கிறார். 

அப்போது, கட்டி பிடித்துக்கொண்டு தன் இடுப்பில் கட்டியிருந்த ஜெலட்டின் குச்சிகளை வெடிக்கச் செய்து இருக்கிறார். இதில், தம்பதிகள் இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே வெடித்துச் சிதறி பரிதாபமாக உயிரிழந்து இருக்கிறார்கள்.

இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், இந்த சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதனிடையே, மனைவியை கொல்ல கணவனே வெடிகுண்டாக மாறி அவரது உயிரையும் இழந்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.