பக்கத்து வீட்டு அங்கிள் ஒருவர், செல்போனில் ஆபாச படம் பார்த்துக்கொண்டு 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமான முறையில் கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத் மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

குஜராத் மாநிலம் சூரத்தின் பல்சானா என்னும் பகுதியில் 11 வயதான சிறுமி ஒருவர், தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இந்த தம்பதிக்கு, இந்த 11 வயது சிறுமி இல்லாமல், தம்பி ஒருவரும் உள்ளார்.

இந்த நிலையில் தான், அந்த 11 வயது சிறுமியும், அவரது தம்பியும் அங்குள்ள ஒரு பள்ளியில் படித்து வந்த நிலையில், சிறுமியின் பெற்றோர்கள் இருவரும் காலையில் வேலைக்கு சென்று விட்டு, தினமும் இரவு தான் வீடு திரும்புவது வழக்கம்.

அதன் படி, சிறுமியும் அந்த சிறுமியின் தம்பியும் பள்ளிக்கூடம் சென்று வந்துவிட்டு வீட்டில் தனியாகவே இருந்து வந்திருக்கிறார்.

இந்த சூழலில் தான், அந்த 11 வயது சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான தயாராம் பட்டேல் என்பவர், திருமணமாகி தனது மனைவியுடன் வசித்து வருகிறார். 

இவர், அடிக்கடி தனது செல்போனில் எந்நேரமும் ஆபாச படங்களை பார்த்து, சபல புத்தியுடன் இருந்தார் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான், கடந்த சில நாட்களுக்கு முன், அந்த 11 வயதான சிறுமியை தனியாக வீட்டிலிருந்த போது, பக்கத்து வீட்டு அங்கிளான தயாராம் பட்டேல், தனது வீட்டில் தம்பியுடன் இருந்த அந்த 11 வயது சிறுமியை, அங்கிருந்து ஏமாற்றி வேறு ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று உள்ளார்.

அவரை நம்பி, அந்த சிறுமி சென்ற நிலையில், அந்த சிறுமியை மிரட்டி பலவந்தமாக தயாராம் பட்டேல் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.

இதற்கு, அந்த தயாராம் பட்டேல் என்பவரின் கூட்டாளியான கலூராம் என்பவரும் உடந்தையாக இருந்தார் என்றும் கூறப்படுகிறது.

இதனையடுத்து, “இந்த சிறுமியை இப்படியே விட்டால் நாம் மாட்டிக்கொள்வோம்” என்று, பயந்து போன தயாராம் பட்டேல், அந்த 11 வயது சிறுமியை கொடூரமான முறையில் கொலை செய்து விட்டு, அவரின் வீட்டில் உள்ள ஒரு அறையில் அந்த சிறுமியின் உடலை போட்டு பூட்டி விட்டு சென்று உள்ளார்.

அப்போது, வீட்டுக்கு வந்த அந்த சிறுமியின் பெற்றோர், தங்களின் மகள் இறந்து கிடப்பதை பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த நிலையில், அங்கேயே கதறி அழுது உள்ளார்.

இதனையடுத்து, இது குறித்து அங்குள்ள போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், இது தொடர்பாக விரைந்து வந்த போலீசார், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகழள ஆய்வு செய்தனர்.

அதன் படி, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளிகள் தயாராம் பட்டேல் மற்றும் அவரது கூட்டாளியான கலுராம் ஆகிய இருவரையும் அதிரடியாக கைது செய்த போலீசார், அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.