கேரளாவில் பாம்பைப் பயன்படுத்தி மனைவியை கொடூரமான முறையில் கொலை செய்த வழக்கில் “கணவன் குற்றவாளி” என்று, கொல்லம் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கி உள்ளது.

கேரள மாநிலம் அடூரை சேர்ந்தவர் 27 வயதான சூரஜ், தனியார் வங்கியில் பணி புரிந்து வந்தார். சூரஜ்க்கு கடந்த கடந்த 2 வருடங்களுக்கு முன்பு, அந்த பகுதியைச் சேர்ந்த 22 வயதான உத்ரா உடன் முறைப்படி திருமணமாகி உள்ளது.

இவர்களது திருமணத்தின் போது, உத்ராவின் பெற்றோர்  100 பவுன் தங்க நகைகள், மற்றும் ஒரு கார் உள்ளிட்டவற்றை வரதட்சணையாக வழங்கி இருக்கிறார்கள்.

ஆனால், தனது மனைவி மீது ஈர்ப்பு இல்லாத கணவனட சூரஜ் 2 வது திருமணம் செய்து கொள்ள விரும்பியதாக தெரிகிறது. இதனால், கணவன் - மனைவிக்கு இடையே அப்போது அடிக்கடி தகராறு ஏற்பட்டு இருக்கிறது.

அந்த நேரத்தில் தான் கடந்த மார்ச் 2 ஆம் தேதியன்று, கேரளா அடூரில் இருக்கும் தனது கணவரின் வீட்டிற்கு வெளியே உத்ராவை ஒரு பாம்பு கடித்து உள்ளது. 

உடனடியாக அவர் அங்குள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து, பல நாட்கள் மருத்துவமனையில் உயிருக்கு போராடிய அவரை ஏப்ரல் 22 ஆம் தேதி பூரணமாக குணமடைந்து வீடு திரும்பினார். 

இதனையடுத்து, தனது பெற்றோருடன் கொல்லம் மாவட்டம் அஞ்சலில் உள்ள தனது வீட்டிற்குச் சென்று ஓய்வெடுத்து வந்தார்.

இந்த நிலையில் தான், மே 7 ஆம் தேதி காலையில், உத்ரா தனது பெற்றோர் வீட்டில் படுக்கையறையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார். 

உத்ராவின் தந்தை விஜயசேனன், தாய்  மணிமேகலா ஆகியோர் மகளின் நிலையைப் பார்த்து பதறிப்போய் உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள்,  “உத்ரா விஷ பாம்பு கடித்து ஏற்கனவே இறந்து விட்டதாக” கூறி உள்ளனர். 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த உத்ராவின் பெற்றோர் வீட்டிற்கு திரும்பி வந்தபோது, அவரது படுக்கையறையில் ஒரு அலமாரியின் கீழ் விஷபாம்பை அவர்கள் பார்த்து உள்ளனர். பின்னர், அந்த பாம்பு கொன்று, அவர்கள் வீட்டின் பின்னால் புதைத்தனர்.

இதனையடுத்து, தனது மகளை அவரது கணவர் வீட்டில் இருக்கும் போதும் சரி, தங்களது வீட்டில் இருக்கும் போதும் சரி 2 முறை பாம்பு கடித்ததால், அவரது மரணத்தில் பல சந்தேகங்கள் அவரது பெற்றோருக்கு எழுந்து உள்ளது. இதனையடுத்து, அந்த பெண்ணின் பெற்றோர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இது குறித்து வழககுப் பதிவு செய்த போலீசார், சூரஜை கைது செய்து விசாரணை நடத்தியபோது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. 

அதாவது, சூரஜ் வனவிலங்கு ஆர்வலர்கள் குழுவில் ஒரு உறுப்பினராக இருந்து வருவதால், தனது மனைவியை கொலை செய்ய கூகுளில் பாம்புகளை தேடி இருக்கிறார். 

அதன் படி, பாம்பு பிடிப்பவரான காளுவதிகல் சுரேசை தொடர்பு கொண்டு, அவர்களிடமிருந்து பாம்பை வாங்கி அவரை கொலை செய்ய முயன்றிருக்கிறார். ஆனால், பாம்பு கடியின் முதல் முயற்சியே தோல்வில் முடிந்து போனது. 

பின்னர், 2 வது முயற்சியாக ​​சூரஜ் மற்றொரு விஷ பாம்பை 10 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி உத்ராவின் வீட்டிற்கு கொண்டு வந்து, அந்த பாம்பை மனைவி மீது வீசி உள்ளார். 

அந்த பாம்பு உத்ராவை 2 முறை கடித்து உள்ளது. இதில் உத்ரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார். இந்த விசயம் விசாரணையில் போலீசார் கண்டுப்பிடித்தனர்.

மேலும், இது தொடர்பான வழக்கு கொல்லம் ஆறாம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த குற்றத்தை அரிதான வழக்காக குறிப்பிட்ட நீதிமன்றம், “பாம்பை பயன்படுத்தி மனைவியைக் கொடூரமாக கொலை செய்த வழக்கில், கணவன் குற்றவாளியே” என்று, நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியது.

அத்துடன், குற்றவாளிக்கான தண்டனை விவரங்களை வரும் 13 ஆம் தேதி தெரிவிக்கப்பட்டும் என்றும், நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.