டெல்லியில் மெட்ரோ ரயில் நிலையம் ஒன்றில் இளம் பெண் ஒருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

டெல்லியில் மெட்ரோ ரயில் நிலையம் ஒன்றில் இளம் பெண் ஒருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியிலுள்ள அக்ஷர்தம் மெட்ரோ ரயில் நிலையத்தில் நேற்று காலை திடீரென இளம்பெண் ஒருவர் மாடிக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கு மாடியில் ஓரத்தில் நின்றுக்கொண்டு தான் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ள போவதாக தெரிவித்துள்ளார். இதை அடுத்து அங்கு இருந்த சிஐஎஸ்.எஃப் வீரர் மற்ற சிஐஎஸ்.எஃப் வீரர்களுக்கு தகவல் அளித்தார். அதன்பேரில் அங்கு வந்த சிஐஎஸ்.எஃப் வீரர்கள் அந்தப் பெண்ணிடம் பேசியதோடு கீழே குதிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். ஆனால் அதை கேட்க அந்தப் இளம்பெண் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அந்த பெண்ணை அங்கிருந்து சிஐஎஸ்.எஃப் வீரர்கள் துரிதமாக செயல்பட்டு அருகே இருந்து ஒரு பெட்ஷீட்டை எடுத்து வந்துள்ளனர். அப்போது அந்த பெண் கீழ் குதிக்கையில் அந்த பெட்ஷீட்டை கீழே விரித்து அப்பெண்ணை அவர்கள் பிடித்துள்ளனர். இதன் காரணமாக அப்பெண் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். அவருடைய வலது காலில் லேசான காயங்கள் மட்டும் ஏற்பட்டுள்ளது. அவருக்கு டெல்லி லால் பகதூர் சாஸ்திரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.  இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோவை சிஐஎஸ்.எஃப் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில்,சிஐஎஸ்.எஃப் வீரர்கள் எடுத்த துரித நடவடிக்கையால் ஒரு இளம்பெண்ணின் உயிர் காப்பாற்றப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதனைத்தொடர்ந்து இவ்வீடியோவை பார்த்து பலரும் சிஐஎஸ்.எஃப் வீரர்களை பாராட்டி வருகின்றனர். மேலும் இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர். இதுக்குறித்து அந்தப் பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர், ஹரியானாவைச் சேர்ந்த பெண் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தன்னுடைய வேலையை விட்டதாக கூறப்படுகிறது. எனினும் அவர் எதற்காக மெட்ரோ மாடியிலிருந்து குதித்தார் என்பது தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏறபடுத்தியுள்ளது. மேலும் அந்த பெண் மாடியில் இருந்து குதித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.