ஆக்சிஜன் இல்லையெனில் டெல்லி முழுமையாக சீரழிந்து விடும் என டெல்லி மாநில அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 


டெல்லியில் கொரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில்,  ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தனியார் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் குறைந்து வருகிறது. இதன் காரணமாக சிகிச்சை எடுத்து வரும் நோயாளிகளை வலுக்கட்டாயமாக டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்கள். 


இதனால் டெல்லிக்கு வரும் ஆக்சிஜன் அளவு என்பது 480 மெட்ரிக் டன்னாக உயர்த்தி உள்ளது மத்திய அரசு. ஆனால் இதுப்போது வரை 270, 280 மெட்ரிக் டன் ஆக்சிஜன் மட்டுமே கிடைக்கிறது. இதுகுறித்து பேசிய டெல்லி மாநில அரசு மத்திய அரசிடம் கூறியதாவது, ‘’ டெல்லியில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியாத சூழல் நிலவுகிறது. இதனால் நாங்கள் வெளிப்பகுதியில் இருந்துதான் ஆக்ஸிஜன் வாங்கி வருகிறோம்.


ஆனால் அந்த தனியார் நிறுவனங்களும் சரியாக கொடுப்பத்தில்லை.இந்த நிலைமை தொடர்ந்தால் டெல்லியின் நிலைமை முடுமையாக சீரழிந்துவிடும். அதனால்  டெல்லி மருத்துவமனைகளுக்கு தட்டுப்பாடின்றி ஆக்சிஜன் கிடைக்க மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்க வேண்டும். ” எனத் தெரிவித்துள்ளது.