“இந்தியாவில் கொரோனா தொற்றின் 3 வது அலை அடுத்த 14 நாட்களில் உச்சம் அடையும்” என்று, சென்னை ஐஐடி எச்சரிக்கை விடுத்து உள்ளது.

தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 3 வது அலை வீசிக்கொண்டு இருக்கிறது. இதனால், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தாக்கம் உச்சத்தில் இருந்து வருகிறது.

அத்துடன், இந்தியாவில் ஒமைக்ரான் வைரசால், கொரோனா தொற்றின் 3 வது அலை அதி வேகமாக பரவி வருகிறது. அதன்படி, நாள் தோறும் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தான், இந்த கொரோனா வைரஸ் நோய் தொற்று, எப்போது உச்சம் அடையும் என்பது குறித்து சென்னை ஐஐடி கணித்து உள்ளது.

அதன் படி, சென்னை ஐஐடி கணிதவியல் துறையும், கம்ப்யூட்டடேஷனல் கணிதம் மற்றும் தரவு அறிவியல் சிறப்பு மையமும் கணக்கீட்டு மாடல் மூலம், கொரோனா பற்றி பகுப்பாய்வு செய்து உள்ளன. 

அந்த வகையில், “ஆர் வேல்யூ என்று அழைக்கப்படும் கொரோனா பரவல் விகிதமானது, 1.57 சதவீதமாக உள்ளது என்றும், இது கடந்த 14 மற்றும் 21 ஆம் தேதிகள் இடையேயான நிலவரம்” என்றும், குறிப்பிடப்பட்டு உள்ளது.

அத்துடன், “இது கடந்த 7 ஆம் தேதிக்கும் 13 ஆம் தேதிக்கும் இடையே 2.2 ஆக இருந்தது” என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதற்கு முன்பாக, டிசம்பர் 25 ஆம் தேதிக்கும் 31 ஆம் தேதிக்கும் இடையே இது 2.9 சதவீதமாக இருந்தது என்றும், இப்படியாக ஒரு கொரோனா நோயாளி 2.9 பேருக்கு தொற்றைப் பரப்புகிற நிலை, தற்போது 1.57 பேருக்கு பரப்புகிற நிலையாக மிகவும் குறைந்து உள்ளது” என்றும், சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

அந்த வகையில், “மும்பையில் இந்த தொற்று எண்ணிக்கை 0.67 என்றும், டெல்லியில் 0.98 என்றும் என்றும் இருக்கிறது” என்றும், சுட்டிக்காட்டி உள்ள சென்னை ஐஐடி, “ஆனால், சென்னையில் இது 1.2 ஆக உள்ளது” என்றும், சுட்டிக்காட்டி உள்ளது. 

அதே நேரத்தில், “இது, கொல்கத்தாவில் 0.56 என்ற அளவில் உள்ளது” என்றும், கூறப்பட்டு உள்ளது.

மேலும், சென்னை ஐஐடி கணிதத்துறை பேராசிரியர் டாக்டர் ஜெயந்த் ஜா இது பற்றி பேசும் போது, “மும்பை, டெல்லி மாநகரங்களில் ஒரு கொரோனா நோயாளி மற்றவர்களுக்கு தொற்றைப் பரப்புகிற ஆர் வேல்யூ, அங்கு கொரோனா உச்சம் அடைந்து உள்ளூர் மயமாகி வருவதை காட்டுகிறது என்றும், ஆனால் டெல்லி மற்றும் சென்னையில் இது இன்னும் 1 க்கு அருகில் உள்ளது” என்றும் கூறியுள்ளார்.

“இதற்கு காரணம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் புதிய வழிகாட்டுதல்கள் படி, அவர்கள் தொடர்பு தடம் அறிதலுக்கான தேவையை நீக்கி உள்ளனர் என்றும், தற்போது இதற்கு முந்தையதைய அளவைப் போல் மிகவும் குறைவான நோய்த் தொற்றுகள் மட்டுமே உள்ளன” என்றும், தெரிவித்து உள்ளார்.

குறிப்பாக, “கொரோனா வைரஸ் தொற்று அடுத்த 14 நாளில் அதாவது பிப்ரவரி 6 க்குள் புதிய உச்சம் பெறும்” என்றும், சென்னை ஐஐடி கணித்து உள்ளது. 

முன்னதாக, “பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதிகளுக்கு இடையே கொரோனா 3 வது அலை உச்சம் அடையும்” என்று, ஏற்கனவே கணிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.