கொரோனா பரவல் எப்போது குறையும் என மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் மத்திய அரசின் அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டது. இனி புதிய நோயாளிகள் அங்கு சிகிச்சைக்கு அனுமதி அனுமதிக்கப்படமாட்டார்கள். 


டெல்லியில் பல தனியார் மருத்துவமனைகளும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக நோயாளிகளை வெளியே செல்ல நிர்பந்திப்பதாக தகவல்.


மறுபக்கம், உலகளவில் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரிப்பது இந்தியாவில் தான் என்பதால் உலகநாடுகள் இந்தியாவிலிருந்து யாரும் வர வேண்டாம் என விமான சேவைகளை ரத்து செய்துள்ளன.


கொரோனா தடுப்பூசி, சிகிச்சைக்கான மருந்து, ஆக்சிஜன், வெண்டிலேட்டர் ஆகியவை பல மாநிலங்களில் பற்றாக்குறை ஏற்பட்டு. உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிர்ச்சியளிக்கும் வகையில் உயர்கிறது. இந்நிலையில் மத்திய அரசு, “வரும் வாரங்களில் கொரோனாவின் கோர தாண்டவம் மிக மோசமாக இருக்கும். அனைத்து மாநில அரசுகளும் மக்களும் தயாராக இருக்க வேண்டும்.

மக்களை அச்சப்படுத்துவதற்காக சொல்லவில்லை, இது தான் உண்மையான சூழல். அனைவரும் மோசமான சூழலை எதிர்கொள்ள முழு அளவில் தயாராக இருக்க வேண்டும். ஆக்சிஜன் தட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது” என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.