“காதலனுடன் சேர்ந்து வாழ எதிர்ப்பு” தெரிவித்து வந்த சாமியாரின் அந்தரங்க உறுப்பை இளம் பெண் பக்தை, அறுத்து வீசிய வழக்கில் அதிரடி திருப்பமாக, அந்த பெண் பக்தையின் காதலனும் தற்போது சேர்க்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த கங்கேசானந்தா சுவாமி என்பவர், அந்த பகுதியில் பக்தர்களுக்கு அருள் வாக்கு கூறி வருகிறார்.

அத்துடன், தன்னை தேடி வரும் பக்தர்களுக்கு அவர், “உடல் மற்றும் மன பிரச்சினைகளை தீர்த்து வைப்பதாக” அப்பகுதி மக்கள் நம்பிக்கை வைத்து, அவரை தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக, இந்த அருள் வாக்கு கூறும் சாமியார், அந்த பகுதியில் பெரும் செல்வாக்கு மிக்க சாமியாராக வலம் வந்தார்.

இந்த நிலையில் தான், புகழ் பெற்ற அந்த கங்கேசனந்த சாமியார், கடந்த 2017 ஆம் ஆண்டு ஒரு இரவு நேரத்தில், அவரின் அந்தரங்க உறுப்பு அறுக்கப்பட்ட நிலையில், அங்குள்ள மருத்துவமனையில் அவசர அவரசமாக அனுமதிக்கப்பட்டார். 

இது குறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த போலீசார், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

அப்போது, இவரது பக்தையாக இருந்த இளம் பெண் ஒருவர், “இந்த சாமியார் என்னை பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்டார் என்றும், இதன் காரணமாக, நான் அவரது அந்தரங்க உறுப்பை அறுத்தேன்” என்றும், வாக்குமூலம் அளித்தார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், இந்த இளம் பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், இது தொடர்பான வழக்கு விசாரணை அங்குள்ள நீதிமன்றத்தில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தான், இந்த வழக்கில் கடந்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு, முக்கிய திருப்பம் ஏற்பட்டு உள்ளது. 

அதன் படி, பாதிக்கப்பட்ட சாமியார் மீது, பலாத்கார குற்றச்சாட்டு சுமத்திய அவரது பெண் பக்தையான இளம் பெண், தனது காதலன் அய்யப்ப தாஸ் என்ற இளைஞனுடன் சேர்ந்து இந்த குற்றத்தை செய்தது தெரிய வந்திருக்கிறது.

அதாவது, “நான் என் காதலனுடன் சேர்ந்த வாழ்வதற்கு, அந்த சாமியார் தடையாக இருந்தார் என்றும், தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்ததால், ஒரு கட்டத்தில் நான் கோவப்பட்டு என் காதலனுடன் சேர்ந்து சாமியாரின் அந்தரங்க உறுப்பை அறுத்துவிட்டதாகவும்” வாக்குமூலம் கொடுத்து உள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, இந்த வழக்கில் அந்த இளம் பெண் மற்றும் அந்த இளம் பெண்ணின் காதலனை சேர்க்க, சட்ட ஆலோசனை கோரப்பட்டு உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

மேலும், இந்த வழக்கில் தற்போது அடுத்த கட்ட விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இதனால், இந்த வழக்கில், அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.