மகள் ரொம்ப நேரமாக சொல்போனில் பேசிக்கொண்டு இருந்ததால், கடும் ஆத்திரமடைந்த தந்தை, மகள் என்றும் பார்க்காமல் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திராவில் தான் இப்படி ஒரு கொடூரமான சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ஆந்திரப் பிரதேசம் விசாகப்பட்டிணத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர், தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இந்த சிறுமி, அந்த பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வருகிறார்.

அதாவது, 42 வயது ஆகும் சிறுமியின் தந்தைக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நல பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

அதன்படி, சிறுமியின் தந்தைககு சிறுநீரகங்கள் இரண்டும் செயலிழந்து உள்ளன. இதனால், அவருடைய மனைவி தனது சிறுநீரகத்தில் ஒன்றை தானமாக அளித்து உள்ளார். 

அதன் தொடர்ச்சியாக, கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சிறுநீரகத்தை தானமாக அளித்த அந்த சிறுமியின் மனைவிக்கு உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. 

இதன் காரணமாக, சிறுமியின் தாயார், தனது தாயார் வீட்டுக்குச் சென்று அங்கிருந்த படியே மருத்துவமனைில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

அதே நேரத்தில், சிறுமி தனது தந்தையை கவனித்து வந்திருக்கிறார். 

இந்த நிலையில் தான், கொரோனா காரணமாக மாணவர்கள் ஆன்லைன் வழியாக பாடம் படித்து வருவதால், இப்படியான சூழலில் அந்த 15 வயது சிறுமி, செல்போனில் தனது தோழிகளிடம் அதிக நேரம் பேசி வந்திருக்கிறார்.

இதனால், கடும் ஆத்திரம் அடைந்த அந்த சிறுமியின் தந்தை, தனது மகளை கண்டிப்பதாக மகள் என்றும் பார்க்காமல், அவரை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி, தனது தந்தையை எதுவும் செய்ய முடியாமல் அப்படியே அமைதியாகவே இருந்திருக்கிறார்.

மகளின் இந்த அமைதியை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அந்த சிறுமியின் தந்தை, அதன் தொடர்ச்சியாக, பல மாதங்களாகவே தனது மகளை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்வதை தொடர்ந்திருக்கிறார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி, இதனை யாரிடமும் சொல்ல முடியாமல் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார்.

அந்த நேரத்தில், ஆந்திராவில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், பள்ளிக்குச் சென்ற அந்த மாணவி, யாரிடமும் எதுவும் பேசாமல் கடும் மன உளைச்சலில் காணப்பட்டு உள்ளார்.

அப்போது, அந்த பள்ளி மாணவியை அழைத்து, அந்த பள்ளியின் ஆசிரியர் விசாரித்து உள்ளார்.

அப்போது, தனது தந்தையால் தனக்கு நடக்கும் பாலியல் அத்து மீறல்கள் குறித்து கூறி, அந்த சிறுமி அழுது உள்ளார்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த பள்ளி ஆசிரியர், அந்த மாணவியின் தந்தையை பள்ளிக்கு அழைத்து விசாரித்து உள்ளார். 

அப்போது, “தனது மகளையே பாலியல் பலாத்காரம் செய்ததை” அந்த தந்தை ஒப்புக் கொண்டு உள்ளார். 

மேலும, தனது செயலுக்காக அவர் அந்த ஆசிரியரிடம் மன்னிப்பும் கேட்டு உள்ளார். 

ஆனால், சிறுமியின் தந்தையை மன்னிக்காத அந்த ஆசிரியர், சிறுமியுடன் அங்குள்ள காவல் நிலையத்திற்கு சென்று, சிறுமியின் தந்தை மீது புகார் அளித்திருக்கிறார். 

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுமியின் தந்தையை அதிரடியாக கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தினார்கள்.

அதன் தொடர்ச்சியாக, மகளை பாலியல் பலாத்காரம் செய்த அந்த கொடூரத் தந்தையை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், நீதிமன்ற உத்தரவுபடி, அவரை சிறையில் அடைத்தனர். இதனால், அந்த பகுதியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.