ஊரடங்கு உத்தரவைப் பயன்படுத்தி 16 வயது சிறுமி, 10 பேரால் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, இந்தியா முழுவதும் கடந்த ஒரு வார காலமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், நாடு முழுவதும் ரயில், பேருந்துகள், கார் மற்றும் ஆட்டோ உள்ளிட்ட எந்த வாகனங்களும் இயங்கவில்லை.

 sixteen yo Jharkhand girl sexual harassment

இதனிடையே, ஜார்கண்ட் மாநிலம் டும்காவிலிருந்து கடந்த 24 ஆம் தேதி 16 வயது சிறுமி, தனது வீட்டிற்குச் செல்ல முயன்றார். ஆனால், பேருந்து உள்ளிட்ட எந்த வாகனமும் இயக்கப்படாமல் இருந்ததால், தனது ஆண் நண்பர் ஒருவரிடம் உதவி கேட்டுள்ளார்.

அவரும், சாலை வழியாகச் சென்றால் போலீசார் இருப்பார்கள் என்றும், அவர்கள் தடுத்து நிறுத்தி கைது செய்துவிடுவார்கள் என்றும் கூறியுள்ளார். மேலும், அந்த பகுதியில் உள்ள வனப்பகுதி வழியாக வீட்டிற்குச் செல்லலாம் என்று கூறி ஐடியா கொடுத்துள்ளார்.

அதன்படி, அந்த சிறுமியும், குறிப்பிட்ட அந்த வனப்பகுதிக்கு வந்துள்ளார். சிறுது தூரம் அந்த சிறுமியும், அந்த ஆண் நண்பரும் வனப்பகுதியில் நடந்து சென்றுள்ளனர். அப்போது, அந்த ஆண் நண்பரின் மற்ற 9 நண்பர்கள், அங்கு மறைந்திருந்து சிறுமியை மிரட்டியும், தாக்கியும் மாறி மாறி வெறித்தீர் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

 sixteen yo Jharkhand girl sexual harassment

இதனையடுத்து, ஆசைகள் அனைத்தும் தீர்ந்த பிறகு, காமம் கரைந்த பிறகு, 10 பேரும் அந்த சிறுமியை விடுவித்துள்ளனர். 

இதனையடுத்து, அந்த சிறுமி எப்படியோ, தனது பெற்றோருக்கு போன் செய்து தனக்கு நேர்ந்த கொடுமையைக் கூறி கதறி உள்ளார். இதனால், பதறிப்போன சிறுமியின் பெற்றோர், அங்குள்ள காவல் நிலையத்திற்கு போன் மூலம் புகார் அளித்துள்ளனர்.

இது குறித்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிறுமியை மீட்டு, அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுமியின் ஆண் நண்பர் உட்பட 10 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, ஊரடங்கு உத்தரவைப் பயன்படுத்தி 16 வயது சிறுமி, 10 பேரால் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.