பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள் என்ன தெரியுமா?!
By Aruvi | Galatta | 11:56 AM
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகப் பிரமதர் மோடி பேசினார். இதில், பிரதமர் மோடியின் உரையில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்...
- கடந்த 22 ஆம் தேதி கடைப் பிடிக்கப்பட்ட மக்கள் ஊரடங்கு வெற்றி பெற்றது. இந்த வெற்றியில் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் பங்குள்ளது. நீங்கள் எல்லோருமே பாராட்டுக்கு உரியவர்களே..
- காட்டுத்தீ போல் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ், பல வல்லரசு நாடுகளே செய்வதறியாமல் திகைத்து வருகிறது. நாம் எவ்வளவோ பரவாயில்லை.
- கொரோனா வைரசை கட்டுப்படுத்த ‘தனித்து இருப்பது’ மட்டுமே ஒரே தீர்வு.
- தனித்து இருத்தல் என்பது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு குடிமகனுக்கும் தான். ஏன், இது பிரதமருக்குக் கூட பொருந்தும்.
- தனித்து இருப்பதை நாம் அலட்சியப்படுத்தினால், இந்தியா அதற்குக் கடுமையான விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும்.
- நாடு முழுவதும் நள்ளிரவு 12 மணி முதல், முழுமையான ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்படும். இது, மக்கள் ஊரடங்கை விட கடுமையானதாக இருக்கும்.
- இந்த ஊரடங்கால் நிதி இழப்பைச் சந்திக்க வேண்டி இருக்கலாம். ஆனால், மக்களின் பாதுகாப்புக்கு இந்த ஊரடங்கு முக்கியம். அதனால் தான், இந்த கடுமையான முடிவு.
- நாடு தழுவிய ஊரடங்கு, 21 நாட்களுக்கு அமலில் இருக்கும்.
- வீட்டை விட்டு ஒரு அடி வெளியே எடுத்து வைத்தால் கூட, கொரோனா வைரஸ் உங்கள் வீட்டுக்குள் நுழைய வழி வகுத்து விடும். இதனால், யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என நாட்டு மக்களைக் கைகூப்பி கேட்டுக் கொள்கிறேன்.
- இந்த 21 நாள் ஊரடங்கைப் பின்பற்றாவிட்டால், நாம் 21 ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளப்படுவோம்.
- ஒவ்வொருவருக்கும் குடும்பம் மிக முக்கியம். குடும்பத்தை நினைத்துப் பாருங்கள்.
- பொறுமையையும், கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க வேண்டிய நேரம் இது.
- கட்டுப்பாடாக இல்லாவிட்டால், பேராபத்து நமக்கு நேரிடும்.
- நமது பாதுகாப்புக்காக, தங்களுடைய வாழ்க்கையைப் பணயம் வைத்து பணியாற்றும் மனிதர்களை நினைத்துப் பாருங்கள் என என் கைகூப்பி உங்களை கேட்டுக்கொள்கிறேன்.
- கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கான மருத்துவ வசதிகளை வலுப்படுத்த மத்திய அரசு 15 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.
- இந்த சூழ்நிலையில், அனைத்து மாநில அரசுகளும் சுகாதார பணிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
- வதந்திகளையும், மூட நம்பிக்கைகளையும் யாரும் நம்ப வேண்டாம்.
- உங்களையும், உங்கள் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
- அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க மத்திய, மாநில அரசுகள் எல்லா நடவடிக்கைகளும் எடுத்து வருகின்றன.
- இந்த சவாலில் நாம் வெற்றி பெறுவோம் என்பதில் எனக்கு முழு நம்பிக்கையும் இருக்கிறது.
என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.