2 சிறுமிகள் கிணற்றில் தள்ளி கொலை செய்த கொடூர தந்தை!
By Aruvi | Galatta | 04:38 PM
கடன் தொல்லையில் 2 சிறுமிகளைக் கிணற்றில் தள்ளி கொலை செய்த கொடூர தந்தையை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அடுத்துள்ள கடலையூர் பகுதியைச் சேர்ந்த 36 வயதான டேவிகுமாருக்கு திருமணமாகி 32 வயதில் மகாலட்சுமி என்னும் மனைவி இருக்கிறார். இவர்களுக்கு 11 வயதில் ஷைனி ஜெயசத்யா, 9 வயதில் ஜெசிகா ராணி என்று 2 மகள்கள் உள்ளனர்.
இதனிடையே, டேவி குமாருக்கு போதிய வருமானம் இல்லாததால், அந்த பகுதியில் உள்ள பல பேரிடம் கடன் வாங்கி குடும்பம் நடத்தி வந்துள்ளார். கடனை திருப்பி செலுத்தாததால், கடன் அவரின் கழுத்தை நெறித்துள்ளது. பலரும் கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்டு வீட்டுக்கு வந்த சத்தம் போட்டதாகத் தெரிகிறது.
இதனால், கடந்த சில நாட்களாக கடும் மன உலைச்சலில் காணப்பட்ட அவர், நேற்று தனது வீட்டிலிருந்த 2 பெண் குழந்தைகளையும் அருகில் உள்ள தோட்டத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
தோட்டத்தில் குளித்து மகிழலாம் என்று 2 குழந்தைகளும் தந்தையுடன் வந்துள்ளனர். தோட்டத்துக்குச் சென்றதும், தன் மனதைக் கல்லாக்கிக்கொண்ட தந்தை டேவிகுமார், தனது 2 மகள்களையும் கிணற்றில் தள்ளி விட்டுள்ளார். பின்னர், அவரும் அந்த கிணற்றில் குதித்துள்ளார்.
இதனிடையே கிணற்றில் குதித்த குழந்தைகள் இருவரும் தங்களைக் காப்பாற்றச் சொல்லி உயிர் பயத்தில் கடுமையாகக் கத்தி கூச்சிட்டுள்ளனர். இதனால், மனம் மாறிய அவர் குழந்தைகளைக் காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால், அதற்குள் குழந்தைகள் இருவரும் பரிதாபாகமாக உயிரிழந்துள்ளார்.
இந்த தகவலைத் தனது நண்பர் ஒருவருக்கு போனில் தெரியப்படுத்திய டேவிகுமார், அதன் பிறகு தலைமறைவானார்.
இது தொடர்பாக விரைந்து வந்த போலீசார், சிறுமிகள் இருவரின் உடல்களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த டேவிகுமாரை தேடி வந்தனர்.
இந்நிலையில், டேவிகுமார் சரணடைந்த நிலையில், அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, கடன் தொல்லையில் 2 சிறுமிகளைக் கிணற்றில் தள்ளி, தந்தையே கொலை செய்துள்ள சம்பவம், அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.