திருமண ஆசை காட்டி 17 வயது சிறுமியுடன் காதலன் உல்லாசம் அனுபவித்து, குழந்தையையும் கொடுத்த காதலனை, போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் ஆரியூர்நாடு குழிவளவு பகுதியைச் சேர்ந்த 22 வயதான நந்தகுமார், அங்குள்ள தெவ்வாய்பட்டி பகுதியைச் சேர்ந்த 17 வயது பெண்ணுடன், காதல் என்னும் பெயரில் நெருங்கிப் பழகி வந்தார்.

Man arrested for making a 17 year girl pregnant

இருவரும் சில மாதங்களாகக் காதலித்து வந்த நிலையில், சிறுமியிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி, அந்த சிறுமியை நந்தகுமார் பாலில் பலாத்காரம் செய்துள்ளான். 

இதேபோல், சிறுமியிடம் பல முறை ஆசை வார்த்தைகள் கூறி, தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாகத் தெரிகிறது. இதில், சிறுமி கருவுற்றுள்ளார்.

பின்னர், சிறுமிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதனிடையே, சிறுமியைத் திருமணம் செய்துகொள்ள, நந்தகுமார் மறுத்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், அங்குள்ள வாழவந்திநாடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

Man arrested for making a 17 year girl pregnant

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், நந்தகுமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர், சேலம் மத்தியில் சிறையில் அடைத்தனர்.