வலைத்தளம் மூலம் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர். 

மதுரையில் வலைத்தளம் மூலம் பாலியல் தொழில் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதன்படி, போலீசார் மதுரையின் குறிப்பிட்ட சில பகுதிகளில் ரோந்து பணிகளில் ஈடுபட்டனர்.

Madurai three women arrested for online prostitution

அப்போது, குறிப்பிட்ட ஒரு வீட்டில் 31 வயதான ரவி, 3 பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டது.

அப்போது, அந்த வீட்டில் போலீசார் உள்ளே நுழைந்ததும், ரவி கத்தியைக் காட்டி போலீசாரை மிரட்டியதாகத் தெரிகிறது. இதனையடுத்து, பாலியல் தொழிலில் ஈடுபட்ட 28 வயதான கலா, 23 வயதான ஜோதிலட்சுமி, 51 வயதான ஈஸ்வரி ஆகிய 3 பெண்களும் போலீசாரை திட்டிவிட்டு, அங்கிருந்து தப்ப முயன்றனர். 

இதனையடுத்து, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், ரவியையும், தப்ப முயன்ற 3 பெண்களையும் மடக்கிப் பிடித்து அதிரடியாகக் கைது செய்தனர்.

Madurai three women arrested for online prostitution

இதனையடுத்து, அவர்கள் பயன்படுத்திய செல்போன்கள் மற்றும் அந்த வீட்டில் உள்ள முக்கிய பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், கைது செய்யப்பட்ட ரவி மற்றும் 3 பெண்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்தியச் சிறையில் அடைத்தனர்.