15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வடமாநில இளைஞர், யாருக்கும் தெரியாமல் சிறுமிக்கு வீட்டில் வைத்து தாலிகட்டிய கொடுமையும் அரங்கேறி உள்ளது.

கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் குறைவான சம்பளத்திற்கு பணியாற்றி வருகின்றனர். 

fifteen year old  kovai girl becomes pregnant

இதில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 20 வயதான பிபீக் தாஸ் என்ற இளைஞரும், அங்குள்ள கரியம் பாளையத்தில் செயல்படும் மில் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

அப்போது, தன்னுடன் வேலை பார்க்கும் பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த இளைஞரை அந்த பெண் அடிக்கடி தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

வீட்டில் அந்த பெண்ணின் 15 வயது மகள் அங்குள்ள பள்ளியில் படித்துக்கொண்டு இருந்துள்ளார். அப்போது, அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி, பேச்சு கொடுத்துள்ளார்.

இதில், அந்த சிறுமியும் அந்த இளைஞரைக் காதலிக்கத் தொடங்கிய நிலையில், அந்த சிறுமியிடம் மேலும் ஆசைவார்த்தைகள் கூறி, அவ்வப்போது உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.

சிறுமியின் வீட்டிற்குச் செல்லும்போதெல்லாம், ஆசைதீரச் சிறுமியை அனுபவித்து வந்த நிலையில் அந்த சிறுமி, கரு உற்றுள்ளார். 

fifteen year old  kovai girl becomes pregnant

இதனையடுத்து, அந்த சிறுமி தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி பிபீக் தாசுக்கு நெருக்கடி கொடுத்துள்ளார். இதனால், யாருக்கும் தெரியாமல் வீட்டில் வைத்தே, அந்த இளைஞர் சிறுமிக்குத் தாலி கட்டி உள்ளார்.

ஆனால், அடுத்த சில நாட்களில் சிறுமியின் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், அவரது பெற்றோர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு, சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி கர்ப்பமாக்க இருப்பதாகக் கூறியுள்ளனர்.

இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், சிறுமியிடம் விசாரித்துள்ளனர். அப்போது, “பிபீக் தாஸ் தன்னை காதலித்து உல்லாசம் அனுபவித்ததாக” கூறியுள்ளார்.

இதனால், இன்னும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவான பிபீக் தாசைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதனிடையே, கோவையில் 15 வயது சிறுமியை வடமாநில இளைஞர் ஒருவர் ஆசை தீர உல்லாசம் அனுபவித்து, கர்ப்பமாக்கிய சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.