14 வயது சிறுமியிடம் சில்மிச சீண்டலில் ஈடுபட்டு பாலியல் தொல்லை கொடுத்த 2 பேர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது.

கடலூர் மாவட்டம் கிள்ளை பகுதியில் 14 வயது சிறுமி, தனது உறவுக்காரப் பெண் ஒருவருடன் சேர்ந்து, அப்பகுதியில் உள்ள கடைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த தினேஷ், வெங்கடேசன், மதுரகவி ஆகிய 3 பேரும், காம மோகத்தில் சிறுமையும், சிறுமியின் உறவுக்காரப் பெண்ணையும் பாலியல் ரீதியில் துன்புறுத்தி உள்ளனர்.

girl sexual harassment

இதனால், அழுதுகொண்டே இருவரும் வீடு திரும்பி உள்ளனர். இது தொடர்பாக இருவரும் தங்களது பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து, இருவரது பெற்றோரும், குறிப்பிட்ட 3 பேரிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால், ஆத்திரமடைந்த 3 காமூகர்களும், சிறுமியின் பெற்றோரைத் தாக்கிவிட்டு, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த கிள்ளை மகளிர் போலீசார், தினேஷ், வெங்கடேசன் ஆகிய 2 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள மதுரகவியை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.