திருமணம் முடிந்த சில மணி நேரத்தில் காதல் மனைவி கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு ஓலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மெய்யப்பன், அந்த பகுதியில் உள்ள சரளை சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஜீவிதாவை காதலித்து வந்துள்ளார்.

Bride kidnapped in Erode after marriage

இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்துகொண்டு, மனசைப் பகிர்ந்துகொண்டு கடந்த 3 ஆண்டுகளாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. 

இதனிடையே, இவர்களது காதலுக்கு, பெற்றோர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதனால், என்ன செய்யலாம் என்று யோசித்த காதலர்கள் இருவரும், வீட்டை விட்டு வெளியேறி கோயிலில் திருமணம் செய்துகொண்டனர்.

இந்நிலையில், மெய்யப்பன் - ஜீவிதா திருமணம் முடிந்த அடுத்த சில மணி நேரத்திலேயே, ஜீவிதாவை அவரது பெற்றோர்கள் ஆட்களை அனுப்பி, கடத்தி உள்ளனர்.

Bride kidnapped in Erode after marriage

இதனால், பதறிப்போன மெய்யப்பன் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், ஜீவிதாவை தேடி வருகின்றனர்.

இதனிடையே, திருமணம் முடிந்த அடுத்த சில மணி நேரத்திலேயே, காதல் திருமணம் செய்துகொண்ட பெண் கடத்தப்பட்ட சம்பவம், ஈரோட்டில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.