“கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்தபோது அத்தை பார்த்துவிட்டதால் கொலை செய்தேன்” - மருமகள்
By Aruvi | Galatta | 06:13 PM
“கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்தபோது அத்தை பார்த்துவிட்டதால், அவரை கொலை செய்தேன்” என்று மருமகள் வாக்குமூலம் அளித்துள்ளார்.
பெங்களூரு பேடராயனபுரா பகுதியில் சுமார் 50 வயது மதிக்கத் தக்க ராஜம்மா, தனது மகன் 26 வயதான குமார், 21 வயதான மருமகள் சவுந்தரியா உடன் வசித்து வந்தார்.
இதனிடையே, மருமகள் சவுந்தர்யாவுக்கு மெஸ்டு கால் மூலம் 25 வயதான நவீன் ஜடேசுவாமி என்பவர் அறிமுகமாகி உள்ளார்.
நவீனின் வசிகர பேச்சில் மயங்கிய சவுந்தரியா, தினமும் மணிக்கணக்கில் போனில் பேசி மகிழ்ந்துள்ளார்.
பின்னர், இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துத் திகட்டத் திகட்ட உல்லாசம் அனுபவித்து வந்தனர். தொடக்கத்தில் நவீன் இடத்திற்குச் சென்று சவுந்தரியா, உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று, சவுந்தர்யா வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து, நவீனை தனது வீட்டிற்கு வரும்படி, சவுந்தரியா அழைத்துள்ளார். நவீனும் அங்கு வர இருவரும் நீண்ட நேரமாக ருசிக்க ருசிக்க உல்லாசம் அனுபவித்துக் கொண்டு இருந்தனர்.
அந்த நேரம் பார்த்து, சௌந்தர்யாவின் மாமியார் ராஜம்மா, வீட்டிற்குள் வந்துவிட்டார். மேலும், மருமகள், கள்ளக்காதலனுடன் உல்லாசம் அனுபவித்துக்கொண்டு, ஆடைகள் இல்லாமல் நிற்பதைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதனால், சத்தம்போட்டு மருமகளை மாமியார் திட்டத்தொடங்கி உள்ளார். மேலும், தனது மகனுக்கு போன் செய்து தகவல் தெரிக்க போனை எடுத்தார்.
அப்போது, சவுந்தர்யாவும் - நவீனும் சேர்ந்து, ராஜம்மாளை கடுமையாகத் தாக்கி கொலை செய்துள்ளனர். பின்னர், அவர் அணிந்திருந்த நகைகளைக் கழற்றி நவீன் ஓடிவிட்ட நிலையில், சவுந்தரியா தனது கணவருக்கு போன் செய்து, “அத்தையை யாரோ நகைக்காகக் கொலை செய்துவிட்டதா” கூறி நாடகம் ஆடி உள்ளார்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசாருக்கு, சவுந்தரியா மீது சந்தேகம் எழுந்துள்ளது.
இதனையடுத்து, சவுந்தர்யாவை தனிப்பட்ட முறையில் அழைத்து விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது, மாமியாரைக் கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, சவுந்தர்யாவை போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே, “கள்ளக்காதலனுடன் உல்லாசம் இருந்ததைப் பார்த்த மாமியாரை, மருமகள் கொலை செய்த சபம்வம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.