65 வயதானவரை 25 வயதான இளம் பெண் திருமணம் செய்துள்ள சம்பவம், முரட்டு சிங்கிள்களை உரசிப்பார்த்த கல்யாணமாக இணையத்தில் வைரலாகி, 90 ஸ் கிட்ஸ் இளைஞர்களை ஆதங்கப்பட வைத்து உள்ளது.

90 ஸ் கிட்ஸ் இளைஞர்களாக இருக்கும் பல இளைஞர்களும், குடும்ப சூழல் காரணமாகவும், மணப் பெண் கிடைக்காமலும் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் முரட்டு சிங்கள்களாக வலம் வந்துகொண்டிருக்கிறார்கள்.

ஆனால், அப்படிப்பட்ட 90 ஸ் கிட்ஸ் இளைஞர்களை வெறுப்பேற்றி உரசிப்பார்க்கும் வகையிலான கல்யாணம் ஒன்று நடந்திருப்பது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் தான் இப்படி ஒரு கல்யாணம் நடந்திருக்கிறது.

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் குனிகல் தாலுகா சந்தேமவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் 25 வயதான மேகனா என்ற இளம் பெண், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இளைஞர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். 

திருமணத்திற்கு பிறகு, அவர்கள் தனிக்குடித்தனம் நடத்தி வந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டிலிருந்து வெளியே சென்ற மேகனாவின் கணவர், அதன் பிறகு வீடு திரும்பாமல் மாயமாகி உள்ளார். 

கணவனை எங்குத் தேடியும் கிடைக்காத நிலையில், இது குறித்து மேகனா அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். என்றாலும், இது குறித்து உரிய பதில் அவருக்கு கிடைக்கவில்லை.

இதனால், தனிமையில் தவித்து இருந்து வந்த மேகனா, 2 வது திருமணம் செய்ய முடிவு செய்தார். 

இதனையடுத்து, மேனகாவுக்கு சிக்கதனேகுப்பே கிராமத்தை சேர்ந்த 65 வயதான சங்கரண்ணா என்பவர் அறிமுகம் ஆகி உள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, 65 வயதான சங்கரண்ணாவுக்கும் 25 வயதான மேகனாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் மனம் விட்டு பேசி வந்த நிலையில், மேகனா சங்கரண்ணாவை திருமணம் செய்ய முடிவு செய்து, தனது முடிவை அவரிடம் அந்த பெண் கூறியிருக்கிறார். 

பேரன் பேத்தி எடுத்த சங்கரண்ணாவும், அந்த பெண்ணின் முடிவுக்கு சம்மதம் தெரிவித்த நிலையில், இவர்கள் இருவரும் அங்குள்ள ஒரு கோயிலில் மாலை மாற்றி முறைப்படி எளிமையான முறையில் திருமணம் செய்துகொண்டனர். 

இதனிடையே, சங்கரண்ணா- மேகனா ஆகியோரின் திருமண புகைப்படத்தை, மேகனா, தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட, இதனைப் பார்த்து கொதித்தெழுந்த இணையவாசிகள் மற்றும் 90 ஸ் கிட்ஸ் இளைஞர்கள் பலரும் வாயிற்றெருச்சலுடனும், சற்று பொறாமையுடனும் அந்த ஜோடிகளை வாழ்த்தி வருகின்றனர்.