கைலாசா நாட்டில் நித்தியானந்தாவை போன்ற சிலைகள் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டதால், அவரது பக்தர்கள் குழப்பம் அடைந்து உள்ளனர்.

“இந்துக்களுக்காக தனி நாடு ஒன்றை உருவாக்குவதாக” கூறிய நித்தியானந்தா, உலகின் ஏதோ ஒரு இடத்தில் “கைலாசா” என்று, தானே ஒரு பெயரை சூட்டி, தனி நாடு ஒன்றை ஒருவாக்கி, அங்கு நித்தியானந்தா தலைமறைவாக இருந்தபடி, இணையதளங்களில் அவ்வப்போது உலா வருவதுடன், பக்தர்களுக்கு அருள் வழங்குவதாக போதனைகளையும் போதித்து வந்தார்.

இந்த சூழலில் தான்,  “கொரோனா காலத்திற்கு பிறகு, முறையான இந்திய உணவுகள் கிடைக்காமலும், இந்திய உணவுப் பொருட்கள் கிடைக்காமல் போனதாலும், போதிய மருத்துவ வசதிகள் இல்லாததாலும், கைலாசாவில் பஞ்சம் தலை விரித்தாடுவதாகவும்” சமீபத்தில் அங்கிருந்து தப்பித்து வந்த ஒரு சீடர் கூறியிருந்த நிலையில், இதனை உண்மையாக்கும் விதமாக, எப்போதும் பிரிஷ்காக போட்டோக்கு போஷ் கொடுக்கும் சாமியார் நித்தியானந்தா, உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பது போல், தனது படுக்கையில் உடல் சோர்வுற்ற நிலையில் இருப்பது போன்று ஒரு புகைப்படத்தை கடந்த வாரம் வெளியிட்டிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

அதன்படி, அந்த போட்டோவில், “கண்கள் சொறுகி, தனது உடல் எடை குறைந்து மிகவும் மெலிந்த தேகத்திடன் படுக்கையில்” நித்தி படுத்திருக்கிறார். இவற்றுடன், “நான் திரும்ப வருவேனு சொல்லு” என்று, தன் கைபட எழுதி கையெழுத்தை போட்டிருந்தார்.

இது பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில், தற்போது “என்னால் முழுமையாக தூங்க முடியவில்லை என்றும், ஒரு இட்லி கூட சாப்பிட முடியவில்லை” என்றும், நித்யானந்தா சமீபத்தில் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், பதிவிட்டது இணையத்தில் பெரும் வைரலானது.

அதன் தொடர்ச்சியாக, கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி திடீரென “நான் சமாதியில் இருக்கிறேன்” என்று, அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். அப்போது, “நித்தி இறந்தே விட்டார்” என்றே செய்திகள் வெளியான போதிலும், “திரும்ப வந்துட்டேன்னு சொல்லு என்றும், இட்லி கூட சாப்பிட முடியாமல் சமாதியில் இருக்கிறேன்” என்றும், அவர் விளக்கம் அளித்திருந்தார்.

“ஒரு மண்டலம் என்ற கணக்கின் படி கடந்த 48 நாட்களாக சமாதியில் இருப்பதாக” கூறிய நித்தியானந்தா, தற்போது “என்ன ஆனார்? என்ற பேச்சும், பரவலாக எழுந்தது.

பின்னர், நித்தியின் சிஷ்யைகள் விளக்குகளை ஏற்றி வைத்து அவருக்காக சிறப்பு வழிபாடும் நடத்தி வருவதாகவும் செய்திகள் வெளியானது.

அதன் தொடர்ச்சியாக, தற்போது கைலாசாவில் நடத்தப்பட்ட ஒரு புதிய வழிப்பாடு ஒன்றில் புதிதாக ஒரு சாமி சிலைகள் வைக்கப்பட்டு, பூஜிக்கப்பட்டு உள்ளன.

இந்த சிறப்பு பூசையானது, “நித்யனந்தேஸ்வர ஹிந்து கோயில்” என்ற, ஒரு புதிய கோயிலில் இந்த சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு இருப்பது தெரிய வந்திருக்கிறது.

இது குறித்து நித்தியானந்தாவின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “சித்திரை நட்சித்திர உட்சவம் என்பதால் இந்த பூஜை செய்யப்பட்டு உள்ளது என்றும், சித்ரா நட்சித்திரம் என்பது பூமியில் ஸ்ரீ பரம்மசமாரின் செயல்களை கொண்டாடும் வகையில் நடத்தப்படும் பூஜை.” என்றும், அதில் விளக்கமும் அளிக்கப்பட்டு உள்ளது.

“அதன் படியே, கைலாசாவில் அவரின் சிலைக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, குறு பூஜை நடத்தப்பட்டது” என்றும், அந்த பதிவில் கூறப்பட்டு உள்ளது.

இந்த சிறப்பு பூசையில் ஒரு புதிய சிலைக்கு வழிபாடு செய்யப்படும் புகைப்படங்கள் இடம் பெற்று உள்ளன. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியான நிலையில், “அந்த சாமி சிலை பார்ப்பதற்கு அச்சு அசல் நித்தியானந்தா போலவே இருக்கிறதே?” என்றும், பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

இதனால், பக்கதர்கள் பலரும் குழப்பம் அடைந்து உள்ள நிலையில், இது தொடர்பாக கைலாசா சார்பில் எந்த விளக்கமும் தரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.