“திருமணம் செய்து கொள்ளாமல், ஒன்றாக சேர்ந்து லிவிங் டுகெதர் லைஃப் வாழ்பவர்களால், பாலியல் குற்றங்கள் அதிகரிக்க அதிக வழி வகுக்கிறது” என்று, மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் குற்றம்சாட்டி உள்ளது. 

வெளிநாடுகளைப் போலவே, இந்தியாவிலும் திருமணம் செய்து கொள்ளாமல், ஒன்றாக சேர்ந்து லிவிங் டுகெதர் லைஃப் வாழும் கலாச்சாரம் பெரிய அளவில் அதிகரித்து வருகிறது என்பதே உண்மை.

ஐடி துறைகள் மட்டுமில்லாமல், லிவிங் டுகெதர் லைஃப் வாழ்பவர்கள் தற்போது எல்லா துறைகளில் பணியாற்றுபவர்களும், இப்படியான  லிவிங் டுகெதர் லைஃப் வாழ்ந்து வருகிறார்கள் என்று, பரவலாகவே கூறப்படுகிறது.

இப்படியான லிவிங் லைப் பற்றி மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்து உள்ளது.

“இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21 வது பிரிவின் கீழ் வழங்கப்பட்ட திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் லிவ்ங் ரிலேஷன்ஷிப் உரிமை பாலியல் குற்றங்கள் மற்றும் விபச்சாரங்கள் அதிகரிப்பதற்கு வழி வகுக்கிறது” என்று, என்று மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் கடுமையாக விமர்சித்து உள்ளது.

அதாவது, 25 வயது இளம் பெண் ஒருவரின், பாலியல் பலாத் புகார் தொடர்பான மனு ஒன்றின் மீது விசாரணை நடத்திய மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தின் நீதிபதி சுபோத் அபியங்கர், லிவ்ங் ரிலேஷன்ஷிப் பற்றி காட்டமாகவே விமர்சித்து இருக்கிறார்.

அதன் படி, “சமீபத்திய காலங்களில் இந்தியாவில் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் உறவுகளால், பாலியல்  குற்றங்கள் அதிகரித்து வருவதைக் கவனத்தில் கொள்ளும் போது, ​​​​லிவ்இன் ரிலேஷன்ஷிப் தடை செய்யலாம் என்பதை, இந்த நீதிமன்றம் கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது” என்றும், அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

“இந்த லிவ்இன் ரிலேஷன்ஷிப் உறவு முறை, இந்திய சமூகத்தின் நெறிமுறைகளை மூழ்கடித்து, காம நடத்தையை ஊக்குவிக்கிறது என்றும், பாலியல் குற்றங்களுக்கு இதுவே அதிகம் வழி வகுக்கிறது” என்றும், அவர் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.  

அத்துடன், “பிரிவு 21 வாழ்வதற்கான உரிமை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது என்றும், ஆனால் இந்த உறவு முறை பாலியல் குற்றங்களை அதிகரிக்க செய்கிறது” என்றும், அந்த நீதிபதி வேதனை தெரிவித்து உள்ளார்.

மேலும், “புகார் அளித்த பெண், 2 முறைக்கு மேல் கர்ப்பமாகிவிட்டதாகவும், விண்ணப்பதாரரின் அழுத்தத்தின் கீழ் கருவைக் கலைத்ததாகவும் வழக்கு டைரி மற்றும் ஆவணங்கள் வெளிப்படுத்தி உள்ளன என்றும், அவர்களின் உறவு முறிந்த போது, ​​​​அந்தப் பெண் வேறு ஒருவரை நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்” என்றும், நீதிபதி சுட்டிக்காட்டி உள்ளார்.

“ஆனால், பாதிக்கப்பட்ட இந்த இளம் பெண்ணுடன் வாழந்தவர், இந்த பெண்ணை அச்சுறுத்தும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்” என்றும், நீதிபதி மிக கடுமையாகவே விமர்சித்து உள்ளார். 

லிவ்இன் ரிலேஷன்ஷிப் பற்றிய நீதிபதியின் இந்த கருத்து, இந்தியாவில் லிவிங் டுகெதர் லைஃப் வாழ்பவர்கள் மத்தியில், பெரும் இடியாக விழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே,  “திருமணம் செய்து கொள்ளாமல், ஒன்றாக சேர்ந்து லிவிங் டுகெதர் லைஃப் வாழ்பவர்களால், பாலியல் குற்றங்கள் அதிகரிக்க அதிக வழி வகுக்கிறது” என்று, நீதிமன்றம் குற்றம்சாட்டி உள்ளது, தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.