“நான் சாகவில்லை, ஆழ்ந்த சமாதி நிலையிலிருந்து விரைவில் மீண்டு வருவேன்” என்று, நித்யானந்தா உருக்கமாக கூறியுள்ளது,  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

“இந்துக்களுக்காக தனி நாடு ஒன்றை உருவாக்குவதாக” கூறிய நித்தியானந்தா, உலகின் ஏதோ ஒரு இடத்தில் “கைலாசா” என்று, தானே ஒரு பெயரை சூட்டி, தனி நாடு ஒன்றை ஒருவாக்கி, அங்கு நித்தியானந்தா தலைமறைவாக இருந்தபடி, இணையதளங்களில் அவ்வப்போது உலா வருவதுடன், பக்தர்களுக்கு அருள் வழங்குவதாக போதனைகளையும் போதித்து வந்தார். ஆனால், சமீப காலமாக அதாவது, “கொரோனா காலத்திற்கு பிறகு, முறையான இந்திய உணவுகள் கிடைக்காமலும், இந்திய உணவுப் பொருட்கள் கிடைக்காமல் போனதாலும், போதிய மருத்துவ வசதிகள் இல்லாததாலும், கைலாசாவில் பஞ்சம் தலை விரித்தாடுவதாகவும்” சமீபத்தில் அங்கிருந்து தப்பித்து வந்த ஒரு சீடர் கூறியிருந்தார். 

இதனை உண்மையாக்கும் விதமாக, எப்போதும் பிரிஷ்காக போட்டோக்கு போஷ் கொடுக்கும் சாமியார் நித்தியானந்தா, உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பது போல், தனது படுக்கையில் உடல் சோர்வுற்ற நிலையில் இருப்பது போன்று ஒரு புகைப்படத்தை கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார். இது இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த போட்டோவில், “கண்கள் சொறுகி, தனது உடல் எடை குறைந்து மிகவும் மெலிந்த தேகத்திடன் படுக்கையில்” நித்தி படுத்திருக்கிறார். இவற்றுடன், “நான் திரும்ப வருவேனு சொல்லு” என்று, தன் கைபட எழுதி கையெழுத்தை போட்டு உள்ளார். 

அத்துடன், “தனது கையெழுத்தில் கூட எழுத்துப்பிழை ஏற்படும் அளவிற்கு, தன் பெயரை தவறாக எழுதி அதை அடித்து திருத்தி” அவர் எழுதியிருந்தார். இது பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில், தற்போது “என்னால் முழுமையாக தூங்க முடியவில்லை என்றும், ஒரு இட்லி கூட சாப்பிட முடியவில்லை” என்றும், நித்யானந்தா சமீபத்தில் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், பதிவிட்டுள்ளது இணையத்தில் பெரும் வைரலானது.

இது தொடர்பாக நித்தியானந்தாவின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பதிவில் பகிர்ந்துள்ள செய்தியில், “நீங்கள் காஸ்மோஸை ஒரு பெரிய காற்று பலூனாகவும், உங்கள் உடலை ஒரு சிறிய பந்தாகவும் அந்த பெரிய ஏர் பலூனுக்குள் கற்பனை செய்தால், நான் பெரிய ஏர் பலூன். இப்போது நான் பெரிய காற்று பலூனாகவும் உணர்கிறேன்” என்று, குறிப்பிட்டு இருந்தார்.

“நான், என்னுடைய அடையாளங்கள் பிரபஞ்சத்துடன் நகர்வதை உணர்கிறேன், பிரபஞ்சத்தில் எதையும் நகர்த்த முடியும் என்று உணர்கிறேன். ஆனால், முரண்பாடாக எதையும் நகர்த்த முடியாது. ஆனால், பாரடாக்ஸி காலமாக என் உடலில் எதையும் நகர்த்த முடியாது. முழுமையான தனிமை - 'நான்' என்பதைத் தவிர, வேறு எதுவும் இல்லை” என்றும், அவர் குறிப்பிட்டிருந்த செய்தி, கடந்த வாரம் பெரும் வைரலானது.

குறிப்பாக, கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி திடீரென “நான் சமாதியில் இருக்கிறேன்” என்று, அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். 

அப்போது, “நித்தி இறந்தே விட்டார்” என்றே செய்திகள் வெளியான போதிலும், “திரும்ப வந்துட்டேன்னு சொல்லு என்றும், இட்லி கூட சாப்பிட முடியாமல் சமாதியில் இருக்கிறேன்” என்றும், அவர் விளக்கம் அளித்திருந்தார்.

“ஒரு மண்டலம் என்ற கணக்கின் படி கடந்த 48 நாட்களாக சமாதியில் இருப்பதாக” கூறிய நித்தியானந்தா, தற்போது “என்ன ஆனார்? என்ற பேச்சும்,  பரவலாக எழுந்தது.

முக்கியமாக, “நித்தி கோமாவிற்கு சென்றுவிட்டார்” என்று, ஒரு பக்கம் செய்திகள் வெளியான நிலையிலும் கூட, இதனை அவரது சிஷ்யைகள் மறுத்தனர். அதே நேரத்தில் நித்தியின் சிஷ்யைகள் கடந்த வாரம் விளக்குகளை ஏற்றி வைத்து அவருக்காக சிறப்பு வழிபாடும் நடத்தி வருகின்றனர் என்ற செய்தியும் வைரலானது. 

இந்த நிலையில் தான், அவர் தற்போது புதிதாக சமூக வலைதளங்களில் வெளியிட்ட பதிவில், “அன்புள்ள பக்தர்கள் மற்றும் அன்பான சீடர்கள், கைலாசவாசிகள் உங்கள் அனைவருக்கும் வணக்கம். நான் தற்போது வரை ஆழ்ந்த சமாதி நிலையை மகிழ்ச்சியாக அனுபவித்து கொண்டிருக்கிறேன்” என்று, குறிப்பிட்டு உள்ளார்.

குறிப்பாக, “நான் மரணமடையவில்லை. மிக விரைவில் எனது உடலில் குடியேறி வழக்கமான சத்சங்கங்களை மேற்கொள்வேன். உயர்ந்த கொள்கைகள் மற்றும் மகா கைலாசாவின் அசாதாரணமான ஆற்றலை உங்களுடன் பகிர்ந்து கொள்வேன்” என்றும், அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, நித்யானந்தாவின் உடல் நிலை இன்னும் சரியாகத காரணத்தால், அவர் மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா திரும்ப உள்ளதாகவும், அதுவும் வரும் 14 ஆம் தேதி பவுர்ணமி வருவதற்கு முன்பாக நித்யானந்தா திருவண்ணாமலைக்கு வந்து சேர்வார்” என்றும், தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.