அக்னிபத் திட்டத்துக்கு எதிராக தெலங்கானாவிலும் ரயிலுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ள நிலையில், பீகாரில் மொத்தமாக 3 ரயில் பெட்டிகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது பெரும் பீதியை கிளப்பி உள்ளது.

பாஜக தலைமையிலான மத்திய அரசு, சமீபத்தில் “அக்னிபத்” என்னும் திட்டத்தை அறிவித்தது. இதனால், நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் ஒன்று திரண்டு, மத்திய அரசு அறிவித்த “அக்னிபத்” திட்டத்திற்கு எதிராக வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதாவது, மத்திய அரசு அறிவித்த “அக்னிபத் யோஜனா” என்னும் திட்டத்தின் படி, அக்னிவீரர்களாக சேருவோரின் எதிர்கால நலன்களை கருத்தில் கொண்டு 3 ஆண்டு சிறப்பு பட்டப்படிப்பை” மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்து உள்ளது. அதன்படி,  “3 ஆண்டு சிறப்பு பட்டப்படிப்பை படிக்கும் இளைஞர்கள், இந்திய ஆயுதப்படைகளுக்கான ஆள்சேர்ப்பு திட்டத்தில், மிக குறுகிய கால ராணுவ வீரராக, அதாவது வெறும் 4 ஆண்டுகள் மட்டுமே,இந்த அக்னிபாத் திட்டத்தின் மூலம் பணியில் சேரலாம்” என்பது, மத்திய அரசின் திட்டமாக உள்ளது.

குறிப்பாக, “3 ஆண்டுகள் இதற்கான படிப்பை படித்து முடித்த பிறகு, வெறும் 4 ஆண்டுகளுக்கு மட்டுமே பணியில் இருக்க முடியும் என்றால், அந்த 4 ஆண்டுகள் பணி முடிந்த பிறகு நாங்கள் என்ன செயய வேண்டும்?” போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் மத்திய அரசைப் பார்த்து எதிர் கேள்வி எழுப்பி உள்ளனர். அதன்படி, மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, பீகார் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளிலும் அந்த மாநில இளைஞர்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டம், நேற்றைய தினமே பீகாரையும் தாண்டி, தமிழகத்திலும் நடைபெற்றது. அதன்படி, வேலூர் மாவட்டம் ஆட்சிய அலுவலகம் எதிராக ஒன்று திரண்ட 100 க்கும் மேற்குபட்ட இளைஞர்கள், “அக்னிபத் யோஜனா” திட்டத்தை எதிர்த்து, மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக முழக்கங்களை எழுப்பினர்.

மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு எதிராக பீகார் மாநிலம் முங்கர், ஜெஹானாபாத் ஆகிய பகுதிகளில் இளைஞர்கள் முன்னதாக சாலை மறியல் மற்றும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சாலையில் நின்ற பேருந்துகளின் கண்ணாடிகளை அடித்துநொறுக்கினர்.  இவற்றுடன், அங்கு நின்ற சில வாகனங்களுக்கு தீ வைத்து எரித்த போராட்டக்காரர்கள், மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழங்கங்களையும் எழுப்பினர்.

அதன் தொடர்ச்சியாக, அக்னிபத் திட்டத்துக்கு எதிராக தெலுங்கானா மாநிலம் செகந்திரபாத் ரயில் நிலையத்திலும் ரயிலுக்கு அங்கு வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்திய போராட்டக்காரர்கள், தீ வைத்து எரித்தனர். 

இதில், பயணிகள் ரயிலை தீ வைத்து எரித்ததுடன் ரயில் நிலைய கடைகளையும் போராட்டக்காரர்கள் சூறையாடினர். வட மாநிலங்களை தொடர்ந்து தென் மாநிலமான தெலுங்கானாவிலும், தமிழகத்திலும் இந்த போராட்டம் பரவி உள்ளதால், பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டு உள்ளது. 

அதே போல், அக்னிபாத் எதிரான இன்றுடன் 3 வது நாளாக பீகாரில் தொடரும் போராட்டத்தில் இன்று காலை, பீகாரில் 3 ரயில்கள் தீ வைத்து எரிக்கப்பட்டு உள்ளன.

விக்ரம்சிலா விரைவு ரயிலின் குளிரூட்டப்பட்ட3 பெட்டிகள் சூறையாடப்பட்டு, ஜன்னல்கள் உடைக்கப்பட்டதுடன், அவற்றுக்கு தீ வைக்கப்பட்டது.

ரயிலில் தீயை கட்டுப்படுத்த முடியாமல், போராட்டக்காரர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். தீயை கட்டுப்படுத்துவதற்குள் அந்த 3 பெட்டிகளும் பெரும்பாலும் எரிந்து முற்றிலுமாக சேதம் அடைந்து உள்ளன. 

இவற்றுடன், அருகில் உள்ள அண்டை மாநிலமான உத்திரப் பிரதேசம், டெல்லியிலும் இன்று காலை முதல் கலவரங்களும் போராட்டங்களும், திடீர் சாலை மறியல் போராட்டங்களும் வெடித்துள்ளதால், நாடு முழுவதும் இளைஞர்கள் ஒன்று திரண்டு, பாஜகவுக்கு எதிராக போராட்டத்தில் குதித்து உள்ளனர். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.