கொடூரத்தின் உச்சம்.. 30 ஆண்கள் சேர்ந்து 16 வயது சிறுமியை கூட்டுப் பலாத்காரம் செய்து காம வெறியாட்டம்..

கொடூரத்தின் உச்சம்.. 30 ஆண்கள் சேர்ந்து 16 வயது சிறுமியை கூட்டுப் பலாத்காரம் செய்து காம வெறியாட்டம்.. - Daily news

கொடூரத்தின் உச்ச பட்சமாக 30 ஆண்கள் சேர்ந்து, ஒரு 16 வயது சிறுமியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து காம வெறியாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம், நெஞ்சைப் பதை பதைக்கச் செய்துள்ளது.

இஸ்ரேல் நாட்டில் தான், இந்த ஈவு இறக்கம் இல்லாத பயங்கர சம்பவம் அரங்கேறி உள்ளது.

இஸ்ரேல் நாட்டின் எய்லாட் நகர் அமைந்துள்ள செங்கடல் ரிசார்ட்டில் தான், இப்படி ஒரு அரக்கத் தனமான பாலியல் வெறியாட்டம் நடந்திருக்கிறது.

செங்கடல் ரிசார்ட் பகுதிக்கு ஒரு 16 வயது உடைய சிறுமி ஒருவர் அந்த பக்கமாக சுற்றிப் பார்க்க வந்ததாகத் தெரிகிறது. 

அப்போது, அந்த பகுதியைச் சேர்ந்த சிலர், அந்த சிறுமியை பலவந்தமாக, அங்கிருந்து மறைவான இடத்திற்குத் தூக்கிச் சென்று உள்ளனர். இதனையடுத்து தான், அந்த உச்சக்கட்ட கொடூரம் நிகழ்ந்துள்ளது.

சுமார் 30 ஆண்கள் சேர்ந்து அந்த 16 வயது சிறுமியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து நாசம் செய்துள்ளனர். இதில், அந்த சிறுமியோ வலி பொறுக்க முடியாத நிலையில், கதறி அழுது வலியால் துடித்துள்ளார். 

சிறுமியின் அலறல் சத்தத்தால் பாலியல் பலாத்காரம் செய்த யாரோ ஒருவர், போதும் என்று அந்த சிறுமியை அங்கிருந்து விடுவித்ததாகத் தெரிகிறது.

மேலும், இது குறித்து வெளியே சொல்லக்கூடாது என்றும், இது தொடர்பாக வெளியே யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவோம் என்றும், அந்த கும்பல் மிரட்டிய பிறகே, அந்த சிறுமியை அங்கிருந்து விடுவித்துள்ளனர்.

இதனால், உடல் முழுவதும் ரண வேதனை உடன், அழுதுகொண்டே நடக்க முடியாமல் வீடு திரும்பிய அந்த சிறுமியை, அவரது பெற்றோர் பார்த்துக் கதறி அழுதுள்ளனர். இதனையடுத்து, அந்த பகுதியில் இருந்த அக்கம் பக்கத்தினர், அந்த சிறுமியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர், அங்குள்ள எய்லாட் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனையடுத்து, சிறுமிக்கு நேர்ந்த இந்த கொடூரச் செயல், அந்த பகுதி முழுவதும் பரவியது. இதனால், கொதித்து எழுந்த அப்பகுதி மக்கள், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர்களை உடனே கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதி போராட்ட களமாக மாறியது. 

பொதுமக்களின் போராட்டங்களை அடுத்து, அந்த பகுதியில் சுற்றித் திரிந்த சந்தேகத்திற்கு இடமான இருந்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும், இந்த பிரச்சனையை அந்நாட்டின் முக்கிய தலைவர்கள் கையில் எடுத்து பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் தொடர்பாகப் பேசத் தொடங்கி உள்ளனர்.

குறிப்பாக, இது தொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ள அந்நாட்டின் மகளிர் உரிமைகள் குழுவான ஹாஸ்டிக்கேரியட்டின் நிர்வாக இலானா வெய்ஸ்மேன் கூறும் போது, “5 பெண்களில் ஒரு இஸ்ரேலிய பெண் தனது வாழ்நாளில் இதுபோன்று ஒரு முறையாவது பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி வருவதாகவும்” கவலைத் தெரிவித்தார்.

அத்துடன், “இஸ்ரேல் நாட்டில் மட்டும் தினமும் சுமார் 260 பாலியல் பலாத்கார சம்பங்கள் நடைபெறுவதாகவும், அது தொடர்பான வழக்குகளும் பதிவாகி வருவதாகவும்” அவர் வேதனைத் தெரிவித்தார்.

இதனிடையே, கொடூரத்தின் உச்சமாக 30 ஆண்கள் சேர்ந்து, 16 வயது சிறுமியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து காம வெறியாட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்திற்கு, உலகின் பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

Leave a Comment