“ஓ, இந்த சக்காளித்துக்குதான் என்னை விவாகரத்து பண்ண துடிக்கிறியா?” கள்ளக் காதலி வீட்டில் வைத்தே கணவனை அடித்து தூக்கிய மனைவி!

“ஓ, இந்த சக்காளித்துக்குதான் என்னை விவாகரத்து பண்ண துடிக்கிறியா?” கள்ளக் காதலி வீட்டில் வைத்தே கணவனை அடித்து தூக்கிய மனைவி! - Daily news

“மனைவியை விவாகரத்து செய்கிறேன்” என்று கூறி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விட்டு கள்ளக் காதலியுடன் ரகசியமாக குடும்பம் நடத்தி வந்த டாக்டர் கணவனை, அந்த கள்ளக் காதலியன் வீட்டில் வைத்து அவரது மனைவி அடித்து வெளுத்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் தான், இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

தெலுங்கானா மாநிலத்தில் சூர்யா பேட்டை பகுதியைச் சேர்ந்த டாக்டர் பானு பிரகாஷ் என்பவர், அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவருக்கு, திருமணமாகி தற்போது 2 குழந்தைகள் உள்ளனர்.

இப்படியான சூழலில் தான், இந்த டாக்டருக்கும், அவரது மனைவிக்கும் அடிக்கடி சண்டை வந்துகொண்டே இருந்து உள்ளது.

இதனால், மனைவியுடனான கருத்து வேறுபாட்டினால் ஏற்பட்ட சண்டையில், மனைவியிடமிருந்து விவாகரத்து கேட்டு அங்குள்ள நீதிமன்றத்தில், அந்த டாக்டர் கணவன் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

ஆனால், டாக்டர் கணவன் பானு பிரகாஷ் கேட்கும் விவாகரத்திற்கு, அவருடைய மனைவியோ விருப்பம் தெரிவிக்காமல் “நான் என் கணவருடன் தான் சேர்ந்து வாழ்வேன்” என்று, நீதிமன்றத்தில் பிடிவாதமாக இருந்து வந்திருக்கிறார். 

இப்படியாக, இந்த விவாகரத்து வழக்கு தொடர்ந்துக்கொண்டே நீண்டு உள்ளது.

இப்படியான சூழலில் தான், பானு பிரகாஷ் வீட்டுக்கு வராமல் பல நாட்கள் வேறு இங்கேயோ அவர் இருந்து வந்திருக்கிறார்.

இதனால், இன்னும் சந்தேகம் அடைந்த அவரது மனைவி, தனது கணவனை கண்காணிக்க ஆரம்பித்து உள்ளார்.

அப்போது தான், தனது கணவன், அந்த பகுதியில் வேறு ஒரு பெண்ணுடன் ரகசியமாக குடும்பம் நடத்தி வந்தது தெரிய வந்திருக்கிறது. 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி, “இதனால் தான், தன்னை தனது கணவன் விவாகரத்து செய்ய துடிக்கிறார் போல?” என்று, முடிவுக்கு வந்திருக்கிறார்.

அதே நேரத்தில், கடும் ஆத்திரமடைந்த அந்த டாக்டரின் மனைவி, கணவரின் இந்த கள்ளக் காதல் விசயம் பற்றி தனது உறவினர்களிடம் கூறி அழுதிருக்கிறார்.

அத்துடன், அந்த மனைவி தனது கணவரின் உறவினர்களை அழைத்துக்கொண்டு திடீரென்று கணவரின் கள்ளக் காதலி வீட்டிற்கே சென்றிருக்கிறார்கள்.

அந்த வீட்டில், டாக்டரும் அவரின் கள்ளக் காதலியையும் ஒன்றாக இருந்து உள்ளனர். இதனால், இன்னும் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்த அவரது மனைவி, தனது கணவனைப் பிடித்து தர்ம அடி கொடுத்திருக்கிறார்.

மேலும், தனது மனைவியை அடி வெளுத்துவாங்கிய அவரது மனைவி, “இந்த சக்காளித்துக்காக தான், நீ என்னை விவாகரத்து பண்ணத் துடிக்கிறியா” என்று, கேள்வி கேட்டுக்கொண்டே, தனது கணவனை அடித்து துவைத்திருக்கிறார். 

அதன் தொடர்ச்சியாக, தனது கணவனையும், அவரது கள்ளக் காதலியையும் பிடித்து அங்குள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று ஒப்படைத்து இருக்கிறார். 

இது குறித்து, அவர்கள் இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

இதனிடையே, கணவன் கள்ளக் காதலியின் வீட்டில் ரகசியமாக குடும்பம் நடத்தி வந்த நிலையில், இருவரையும் காவல் நிலையத்திற்கு இழுத்துச்சென்று, மனைவியே போலீசில் ஒப்படைத்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment