பெண்களுக்கு எதிராக குற்றங்கள் அதிகரிப்பு! 2 ஆண்டுகளில் எவ்வளவு தெரியுமா? ஷாக் ரிப்போர்ட்..

பெண்களுக்கு எதிராக குற்றங்கள் அதிகரிப்பு! 2 ஆண்டுகளில் எவ்வளவு தெரியுமா? ஷாக் ரிப்போர்ட்.. - Daily news

தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சற்று அதிகரித்து உள்ளதாக” காவல் துறை கொள்கை விளக்க குறிப்பில் அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளன.

“இந்தியாவில் சைபர் குற்றங்களானது கடந்த 3 ஆண்டில் 5 மடங்கு அளவுக்கு அதிகரித்திருப்பதாக” நாடாளுமன்ற குழுவிடம் அறிக்கை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதாவது, இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்கள் 400 சதவீதம் அளவுக்கு அதிகரித்து உள்ளதாக, கடந்த ஆண்டு  அறிக்கை ஒன்று வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

இது தொடர்பாக, தேசிய குற்ற ஆவண காப்பகம் புள்ளி விரபங்களை வெளியிட்டு அந்த தகவலை உறுதி செய்தது. 

அதன் தொடர்ச்சியாக,  “தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து உள்ளதாக” காவல் துறை கொள்கை விளக்க குறிப்பில் அதிர்ச்சி அளிக்கும் தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

அதாவது, “தமிழ்நாட்டில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து உள்ளதாக தமிழக சட்டப் பேரவையில், காவல் துறையின் கொள்கை விளக்க குறிப்பில் கூறி உள்ளது.

தமிழ்நாடு சட்டப் பேரவையில் இன்று காவல் மற்றும் தீயணைப்புத் துறை, மீட்புப் பணிகள் மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்றது. 
அப்போது, தமிழக காவல் துறை சார்பில் கொள்கை விளக்க குறிப்பு வழங்கப்பட்டது. அந்த விளக்க குறிப்பில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. 

மேலும், 

- 2021 ஆம் ஆண்டில் பாலியல் பலாத்காரம் தொடர்பாக 442 வழக்குகள் பதியப்பட்டு உள்ளது. 

- வரதட்சணை மரணம் தொடர்பாக 27 வழக்குகள் பதிவு. 

- கணவர் மற்றும் அவரின் உறவினர்களால் பெண்களுக்கு கொடுமை என்று 875 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

- மானபங்கம் செய்ததாக 1,077 வழக்குகள் பதிவு.

- குறிப்பாக, கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை மொத்தமாக 4 ஆயிரத்து 469 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

- டிஜிட்டல் மயமாக்கல், இணைய வசதிகள் மற்றும் கைபேசிகளின் பரவலான பயன்பாடு போன்றவை இணையதள குற்றங்கள் வேகமாக அதிகரிக்க காரணமாக உள்ளது என்றும், இது கடந்த 2011 ஆம் ஆண்டு இணையதள குற்ற புகார்களின் எண்ணிக்கை 748 ஆக இருந்த நிலையில், 2021 ஆம் ஆண்டு 13,077 ஆக அதிகரித்து இருக்கிறது.

- இணையதள குற்ற வழக்குகளில் வெளி நாட்டினர் ஈடுபடுவதால், குற்றவாளிகளை கைது செய்தல் மற்றும் திருட்டுப் போன சொத்துக்களை மீட்டெடுத்தல் ஆகியவை மிகப்பெரும் சவாலாக இருக்கிறது என்றும், அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

- மாநிலத்தில் 176 மோப்ப நாய்கள் பணியில் உள்ளதாக தகவல். 

- கண்காணிப்பு பணி - 71 மற்றும் வெடி மருந்து மற்றும் போதைப் பொருட்கள் - 99  மோப்ப நாய்கள், தாக்குதல் பணி - 2 மற்றும் இதர பணி - 4 மோப்ப நாய்கள் உள்ளனதாகவும் தகவல்.

- காவல் துறையினர் பொது மக்களை நட்புடன் நடத்துவதை உறுதி செய்ய விரைவில் விரிவான பயிற்சி அளிக்கப்படும் என்றும், தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

- ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவில் இருந்து மீட்கப்பட்டு, டெல்லியில் இந்திய தொல்லியல் துறையினர் வசம் உள்ள சிலைகள் விரைவில் தமிழ்நாடு வந்தடைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும், தகவல் கூறப்பட்டு உள்ளது.

Leave a Comment