சமயல்காரரை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து மிரட்டிய மாணவர்கள்.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்!

சமயல்காரரை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து மிரட்டிய மாணவர்கள்.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்! - Daily news

கோவையில் ஓரினச்சேர்க்கைக்கு வரவழைத்து சமையல்காரரை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து மிரட்டிய கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

கோவை கணபதி அருகே உள்ள தாரணி நகரை சேர்ந்தவர் கங்காதரன் அவரது வயது 34 ஆகும். இவர் காந்திபுரத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் சமையல்காரராக வேலை பார்த்து வருகிறார். ஓரினச்சேர்க்கையாளரான இவர் இது சம்பந்தமான சமூக வலைதள செயலியில் உறுப்பினராக இருந்து வந்துளார்.
 
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கங்காதரனை வாலிபர் ஒருவர் செயலியில் உள்ள கங்காதரனின் செல்போன் எண்ணை பார்த்து அவரை தொடர்பு கொண்டார். பின்னர் அந்த வாலிபர் கங்காதரனிடம் சாய்பாபா காலனி தனியார் ஆஸ்பத்திரி பின்புறம் உள்ள ரெயில்வே தண்டவாள பகுதிக்கு வந்தால் ஜாலியாக இருக்கலாம் எனக் தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து கங்காதரன் அந்த வாலிபர் அழைத்த இடத்துக்கு சென்றார். அங்கு சென்றபோது 3 வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி கங்காதரன் ஆடைகளை கழற்றினர். பின்னர் அவர்கள் தங்களது செல்போனில் கங்காதரனை நிர்வாணமாக வீடியோ எடுத்தனர். இந்த வீடியோவை சமூக வலைத் தளங்களில் பதிவிடாமல் இருக்க பணம் தர வேண்டும் என கூறி மிரட்டியுள்ளனர். மேலும் அவரிடம் இருந்த செல்போனை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி  சென்றுவிட்டனர். 

மேலும் இதுகுறித்து கங்காதரன் சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கங்காதரனை ஓரினச்சேர்க்கைக்கு வரவழைத்து நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து மிரட்டியது சிவானந்தா காலனி அருகே உள்ள காந்தி நகரை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் பிரசாந்த் வயது 19, நிஷாந்த் வயது 21, மாணிக்கம் வயது 20, என்பது தெரியவந்தது.

இதனையடுத்து தலைமறைவாக பிரசாந்த் மற்றும் நிசாந்தை கைது செய்தனர். மாணிக்கத்தை தேடி வருகின்றனர். ஓரினச்சேர்க்கைக்கு வரவழைத்து சமையல்காரரை மிரட்டி பணம் பறித்த கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment