உணவில் மயக்கமருந்து கலந்து.. 10 ஆம் வகுப்பு மாணவிகள் 17 பேருக்கு பாலியல் டார்ச்சர்! பள்ளி நிர்வாகிகள் வெறிச்செயல்..

உணவில் மயக்கமருந்து கலந்து.. 10 ஆம் வகுப்பு மாணவிகள் 17 பேருக்கு பாலியல் டார்ச்சர்! பள்ளி நிர்வாகிகள் வெறிச்செயல்.. - Daily news

உணவில் மயக்கமருந்து கலந்து கொடுத்து 10 ஆம் வகுப்பு மாணவிகள் 17 பேருக்கு பள்ளி நிர்வாகிகள் பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் முசாஃபர் நகரின் உள்ள மீரட் நகர் அருகே செயல்பட்டு வரும் தனியார் சிபிஎஸ்இ பள்ளியின் மேலாளர், அந்த பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வரும் 17 மாணவிகளை, கடந்த நவம்பர் 20 ஆம் தேதி அன்று செய்முறை வகுப்புகளுக்காக பள்ளிக்கு வரவழைத்து இருக்கிறார்.

அத்துடன், அதே பள்ளியில் படிக்கும் ஆண் மாணவர்களை வரவழைக்காத நிலையில், வெறும் மாணவிகளை மட்டும் வரவழைத்த பள்ளியின் மேலாளர், அந்த மாணவிகளை செய்முறை வகுப்புகளுக்காக வேறு ஒரு பள்ளிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

இதனையடுத்து, வேறு பள்ளிக்கு சென்ற நிலையில் மாணவிகளுக்கு மதியம் சாப்பிட கிச்சடி உணவு வழங்கப்பட்டது. 

அப்போது, அந்த உணவில் மயக்க மருந்து கலந்திருந்ததால், அதனை சாப்பிட்ட மாணவிகள் ஒவ்வொருவராக மயக்கம் அடைந்திருக்கின்றனர்.

இதனையடுத்து, மாணவிகள் சார்ந்த பள்ளியின் மேலாளரும், அந்த மாணவிகளை அழைத்து வந்த பள்ளியின் மேலாளர் என இருவரும் சேர்ந்து, மயங்கிக் கிடந்த மாணவிகளை பாலியல் தொல்லை அளித்து, அவர்களை துன்புறுத்தி இருக்கின்றார்கள். 

அந்த நேரத்தில், மயக்கம் தெளிந்து எழுந்த மாணவிகளிடம், “இது குறித்து வெளியே யாரிடமும் எதுவும் சொல்லக்கூடாது என்றும், மீறினால் கொலை செய்துவிடுவோம்” என்றும், அவர்கள் இருவரும் சேர்ந்து சக மாணவிகளை மிரட்டி உள்ளனர்.

குறிப்பாக, ஒரு சில மாணவிகள் மயக்கம் தெளியாத நிலையில், மறு நாள் காலையில் தான் அந்த மாணவிகள் தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

இதனையடுத்து, வீடு திரும்பிய மாணவிகளில் சிலர் பயந்த நிலையில், சில மாணவிகள் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகள் குறித்து தங்களது பெற்றோரிடம் கூறி கதறி அழுது உள்ளனர்.

இதனையடுத்து, சில மாணவிகள் தங்களது பெற்றோர் மற்றும் கிராமத் தலைவருடன் சென்று அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனாலும், பள்ளிகளின் செல்வாக்கினால் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், வழங்கும் பதிவு செய்யாமல் அலட்சியமாக இழுத்தடித்து உள்ளனர்.

பின்னர், கிராமத் தலைவர் மாவட்ட எஸ்.பிக்கு வாட்ஸ் அப் மூலம் புகார் அளித்த நிலையில், மேலும் சில பெற்றோர் பாஜக எம்எல்ஏ உத்வலை சந்தித்து முறையிட்டனர். அதன் பிறகே, இந்த விவகாரம் வெளி உலகத்திற்கு வந்தது. 

அதன்படி, மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த பள்ளி நிர்வாகிகள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதனையடுத்து, குறிப்பிட்ட இரு பள்ளிகளின் மேலாளர்களும் தற்போது தலைமறைவாகி உள்ளனர். ஆனாலும் போலீசாரின் தீவிர தேடுதலுக்கு பிறகு, தற்போது அதில் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டு உள்ளார். இச்சம்வம், அந்த மாநில மக்களிடையே கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment