“என்னை வச்சிருக்கிறியா?” கல்யாணத்துக்கு மறுத்த கள்ளக் காதலி.. காதலன் செய்த செயல் என்ன தெரியுமா?

“என்னை வச்சிருக்கிறியா?” கல்யாணத்துக்கு மறுத்த கள்ளக் காதலி.. காதலன் செய்த செயல் என்ன தெரியுமா? - Daily news

கல்யாணத்திற்கு சம்மதிக்காத கள்ளக் காதலியை கொன்றுவிட்டு, அந்த கள்ளக்க காதலனும் தற்கொலை கொலை செய்துக்கொண்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ராஜஸ்தான் மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ராஜஸ்தானின் மாநிலம் பாலி மாவட்டத்தில் உள்ள ஜோத்புரில், 30 வயதான சகன் பஞ்சாரா என்பவர், கல்யாணமான நிலையில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

அதே போல், அதே பகுதியைச் சேர்ந்த 23 வயதான மம்தா பஞ்சாரா  என்ற இளம் பெண்க்கு, ஏற்கனவே 2 முறை திருமணம் ஆகி, 2 கணவர்களிடமும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, விவகாரத்து ஆகி உள்ளது.

அத்துடன், திருமணத்தின் மீதே அந்த 23 வயதான மம்தா பஞ்சாராவுக்கு, ஒரு வெறுப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

இதனையடுத்து, கணவனை பிரிந்த 23 வயதான மம்தா பஞ்சாரா என்ற இளம் பெண், யாரையும் திருமணம் செய்துகொள்ளாமல், அந்த பகுதியில் தனியாக வசித்து வந்தார்.

அப்போது, ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்த சாகனுக்கும், அந்த 23 வயதான மம்தா பஞ்சாராவுக்கும் இடையே அறிமுகம் ஏற்பட்டு, அவர்களுக்குள் கள்ளக் காதல் ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக, இவர்கள் இருவரும், அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்திருக்கிறார்கள்.

இப்படியாக, இருவரும் உல்லாசமாக தினமும் வாழ்ந்து வந்த நிலையில், ஒரு கட்டத்தில் சாகனுக்கு, அந்த இளம் பெண் மம்தாவை 2 வதாக திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டு உள்ளார்.

இதனையடுத்து, தனது திருமண ஆசை குறித்து, தனது கள்ளக் காதலியான அந்த பெண்ணிடம் அவர் கூறியிருக்கிறார்.

ஆனால், அவர் ஏற்கனவே இரு முறை திருமணம் ஆகி தோற்றுப் போனதால், மம்தா இதற்கு சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

அதன் தொடர்ச்சியாக, தன்னை திருமணம் செய்துகொள்ளச் சொல்லி அவர், பல முறை மம்தாவிடன் வற்புறுத்தி வந்திருக்கிறார். ஆனால், எவ்வளவோ சொல்லியும், கேட்காத அந்த கள்ளக் காதலி மீது கடும் கோபம் அடைந்த கள்ளக் காதலன் சாகன், கடந்த சில நாள்களுக்கு முன்பு கள்ளச் சந்தையில் ஒரு துப்பாக்கியை வாங்கி, கள்ளக் காதலியான மம்தாவை சுட்டு கொன்று உள்ளார். 

அதன் பிறகு, அதே துப்பாக்கியால் தன்னையும் சுட்டுக்கொண்டு, கள்ளக் காதலன் சாகன் தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக, விரைந்து வந்த போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டு வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம், ராஜஸ்தான் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment