மாமனாருடன் கள்ளக் காதலில் இருந்த மனைவி! கண்டித்த கணவன் கொலை..

மாமனாருடன் கள்ளக் காதலில் இருந்த மனைவி! கண்டித்த கணவன் கொலை.. - Daily news

மாமனாருடன் கள்ளக் காதலில் உறவில் இருந்த மனைவியை கண்டித்த கணவனை, அவர்கள் இருவரும் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் என்னும் பகுதியில் 64 வயதான பல்வந்த் சிங் என்பவர் வசித்து வந்தார்.

இவருக்கு, 40 வயதில் விக்ரம் சிங் என்ற மகன் இருந்தார். இந்த விக்ரம் சிங்கிற்கு 35 வயதான பூஜா என்ற மனைவியும், எட்டு வயதில் ஒரு மகனும் இருந்தனர்.

இந்த சூழலில் தான், 40 வயதான கணவன் விக்ரம் அடிக்கடி வேலை விஷயமாக வெளியூர் சென்று வந்தார்.

அப்போது, வீட்டில் தனியாக இருந்த 35 வயதான மருமகள் பூஜா மீது, வீட்டில் இருந்த அவரது மாமனார் 64 வயதான பல்வந்த் சிங், சற்று சலப்பட்டு உள்ளார்.

அதன்படியே, 64 வயதான மாமனார் பல்வந்த் சிங் விரிந்த கள்ளக் காதல் வலையில், பூஜாவும் விழுந்து உள்ளார்.

இதனையடுத்து, அவர்கள் இருவரும் வீட்டில் அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்து உள்ளனர். இப்படியாக, அவர்கள் இருவரும் ஜாலியாக உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்து உள்ளனர்.

இப்படியாக, மானமாரும் - மருமகளும் ஜாலியாக உல்லாசமாக இருக்கும் போது, வெளி ஊரில் இருந்து வந்த அந்த பெண்ணின் கணவன் விக்ரம் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்து உள்ளார்.

இதனையடுத்து, கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது.

அப்போது, கணவன் விக்ரம், தனது மனைவியை கண்டித்து உள்ளார். ஆனால், அவரது மனைவி “உன்னை விட, மாமனார் என்னை நன்றாக பார்த்துக்கொள்கிறார்” என்று, கூறி வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.

இப்படியாக கணவன் - மனைவி சண்டை தொடர்ந்த நிலையில், மருகளும் - மாமனாரும் சேர்ந்து கணவன் விக்ரமை கடந்த 5 ஆம் தேதி இரவு நேரத்தில், கொலை செய்து உள்ளனர். பின்னர், அந்த வீட்டின் மின் விசிரியில் தற்கொலை செய்துகொண்டது போல் தொங்க விட்டு அவர்கள் இருவரும் சேர்ந்து நாடகம் ஆடி உள்ளனர்.

பின்னர், இது குறித்து விரைந்து வந்த போலீசார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனை செய்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

மேலும், இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் “இது தற்கொலை அல்ல கொலை தான்” என்று, போலீசார் கண்டுப்பிடித்தனர்.

இதனையடுத்து, அந்த மாமனாரையும், மருமகள் பூஜாவையும் போலீசார் அதிரடியாக கைது செய்து, சிறையில் அடைத்தனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment