கணவனை கட்டி போட்டு கர்ப்பிணி பெண்ணை பலாத்காரம் செய்த கொடூரம்!

கணவனை கட்டி போட்டு கர்ப்பிணி பெண்ணை பலாத்காரம் செய்த கொடூரம்! - Daily news

கணவனை கட்டி போட்டு, அந்த கணிவனின் கண் முன்னேயே அவரது கர்ப்பிணி மனைவியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தானில் நாட்டில் தான் இப்படி ஒரு பயங்கர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

இந்த கொரோனா ஊரடங்கு காலத்திற்குப் பிறகு, உலகம் முழுவதும் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்குப் பிறகு, மனிதனின் மன நிலைகள் பல வகைகளில் மாற்றம் கண்டதன் விளைவாகவே, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது.

அந்த வகையில், பாகிஸ்தான் நாட்டில் உள்ள லாகூர் அடுத்து உள்ள பஞ்சாப் மாகாணத்தில், ஜீலம் நகரில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர்.

இதில், அந்த நபரின் மனைவி கர்ப்பிணியாக இருக்கிறார். இப்படியான நிலையில் தான், அந்த கணவன் - மனைவிகளான அந்த தம்பதிகள், இரவு நேரத்தில் அவர்களது வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தனர்.

அப்போது, நள்ளிரவு நேரத்தில், அந்த தம்பதியரின் வீட்டுக்குள் அத்து மீறி நுழைந்த 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று, தூங்கிக்கொண்டிருந்த அந்த கணவரை கடுமையாக அடித்து அதைத்து தாக்கி உள்ளனர்.

இதனையடுத்து, அந்த கணவனை கயிறால் கட்டி போட்ட அந்த கும்பல், கர்ப்பிணியான அவரது மனைவியை, அந்த கும்பல் கொடூரத்தின் உச்சமாக அந்த கணவன் முன்னாடியே பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறது.

இதனையடுத்து, அந்த பெண்ணை பலாத்காரம் செய்துவிட்டு, அங்கிருந்து எதையும் எடுக்காமல் அந்த கும்பல் அங்கிருந்து தப்பித்து ஓடியிருக்கிறது. 

மறுநாள் இந்த சம்பவம் பற்றி தெரிந்துகொண்ட அந்த ஊர் பஞ்சாப் போலீசார், வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய அந்த பாலியல் குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும், இந்த கொடூர சம்பவம் பற்றி கூறிய பஞ்சாப் போலீசார், “கர்ப்பிணிக்கு மருத்துவ பரிசோதனை தற்போது நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது என்றும், அந்த பெண்ணின் ரத்த மாதிரியை தடயவியல் ஆய்வுக்காக லாகூருக்கு அனுப்பி வைத்து உள்ளோம்” என்றும், கூறினர். 

அத்துடன், “இந்த ஆய்வு முடிவுகள் முழுமையாக வந்த பிறகே, மற்ற விவரங்கள் ஒவ்வொன்றாக தெரிய வரும் என்றும், இது தொடர்பான விசாரணை தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது” என்றும், போலீசார் தெரிவித்து உள்ளனர்.

இதனிடையே, பாகிஸ்தானில் கணவரை தாக்கி அவரை கட்டி போட்டு விட்டு, அவரது கர்ப்பிணி மனைவியை 5 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment