கோயில் திருவிழாவில் நிர்வாண நடனம்! வீடியோ வைரலானதால் கடும் அதிர்ச்சி..

கோயில் திருவிழாவில் நிர்வாண நடனம்! வீடியோ வைரலானதால் கடும் அதிர்ச்சி.. - Daily news

கோவில் திருவிழாவில் நள்ளிரவு நேரத்தில் நிர்வாண நடனம் ஆடியோ வீடியோக்கள் வைரலான சம்பவம், பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர பிரதேசத்தில் தான், இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள தள்ளரேவு மண்டலத்திற்கு உட்பட்ட உப்பங்கலா கிராமத்தில் அம்மன் கோயில் திருவிழாவானது, வெகு விமர்சனையாக நடைபெற்று முடிந்து உள்ளது.

அதன் படி, உப்பங்கலா அம்மன் கோயில் திருவிழாவானது கடந்த 14 ஆம் தேதி தொடங்கிய நிலையில், நேற்று அதிகாலை வரை இந்த அம்மன் கோயில் திருவிழாவானது நடந்திருக்கிறது.

இந்த திருவிழாவில், உப்பங்கலா கிராமத்தில் உள்ள பக்தர்கள் மட்டுமில்லாது, அக்கம் பக்கம் கிராமத்திலிருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இப்படியான சூழலில் தான், இந்த கோயில் திருவிழாவில் ஆடலும் பாடலும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

அதன்படி, அந்த பகுதியில் பிரபலமாக திகழ்ந்த ஆடலும் பாடலும் குழுவினர், நேற்று இரவு 10 மணிக்கு மேல் அந்த கோயில் திருாவில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் சினிமா பாடல்களுக்கு கிளுகிளுப்பான நடனம் ஆடி உள்ளனர்.

ஒரு கட்டத்தில், இந்த ஆடலும் பாடலும் நிகழ்ச்சியானது நள்ளிரவையும் கடந்து சென்றுக்கொண்டிருந்த நிலையில், இந்த நிகழ்ச்சியை காண வந்திருந்த பெண்கள் அனைவரும், நள்ளிரவு நேரத்தில் வீடுகளுக்கு திரும்பி சென்று உள்ளனர்.

இதனையடுத்து, அந்த நிகழ்ச்சியின் போது அதிக அளவில் இளைஞர்கள் மற்றும் வயதானவர்கள் என்று அதிக அளவில் கூடியிருந்து உள்ளனர்.

அந்த நேரம் பார்த்து, ஆடலும் பாடலும் நிகழ்ச்சியில், சில இளம் பெண்கள், நிர்வாண நடனம் போல், மிகவும் ஆபாசமாகவும், கிளுகிளுப்பாகவும் நடனம் ஆடியதாகவும் கூறப்படுகிறது. 

இதனை, அங்கு கூடியிருந்த சில இளைஞர்கள் விளையாட்டுத் தனமாக தங்களது செல்போனில் வீடியோவாக எடுத்துக்கொண்ட நிலையில், அந்த நிர்வாண நடன நிகழ்ச்சியானது, அந்த பகுதியில் உள்ள சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. 

அத்துடன், அந்த பகுதியில் உள்ள போலீசாரின் கவனத்திற்கும் அந்த நிர்வாண நடன நிகழ்ச்சியின் வீடியோ சென்று உள்ளது.

இதனைப் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியைச் சேர்ந்த கொரிங்கா காவல் நிலைய போலீசார், தீவிரமாக விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், கடந்த 14 ஆம் தேதி நள்ளிரவு முதல் நேற்று அதிகாலை 3 மணிக்கு இடையில் இந்த நடனம் அரங்கேறி இருப்பது, தெரிய வந்தது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், இது பற்றி பேசும் போது, “இந்த ஆபாச நடனம் தொடர்பாக அந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த 10 பேரை கைது செய்து உள்ளோம்” என்று, கூறியுள்ளனர்.

மேலும், “கைது செய்யப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது என்றும், மற்ற விவரங்களை தொடர்ந்து விசாரணை நடத்தி நாங்கள் சேகரித்து வருகிறோம்” என்றும், போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, கோயில் திருவிழாவில், நிர்வாண நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. 

Leave a Comment