9 மாத கைக்குழந்தையை அடித்து தூக்கி வீசிய கொடூர தாய்

9 மாத கைக்குழந்தையை அடித்து தூக்கி வீசிய கொடூர தாய் - Daily news

9 மாத பச்சிளம் கைக் குழந்தையை அடித்து, தூக்கி வீசிய கொடூர தாயின் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியையும், கடும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் காஷ்மீர் மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ஜம்மு காஷ்மீரின் மாநிலம் சம்பா மாவட்டத்தில் பிரை கமீலா என்னும் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில், வசித்து வரும் இளம் பெண் ஒருவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்து உள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, கடந்த ஆண்டு இந்த பொண்ணுக்கு குழந்தை பிறந்த நிலையில், தற்போது அந்த குழந்தை 9 மாத கைக் குழந்தையையாக வளர்ந்து உள்ளது.

இந்த நிலையில் தான், அந்த குழந்தையின் தாய், தான் தாய் என்பதையே மறந்து போய் துளியும் இறக்கமல் இல்லாமல் தனது 9 மாத பச்சிளம் கைக் குழந்தையை அடித்து, தூக்கி வீசி எரிந்திருக்கிறார்.

இந்த கொடூர சம்பவம் தொடர்பான அந்த கொடூர தாயின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. 

அந்த கொடூரமான வீடியோவில், “அந்த கொடூர தாய், தனது மடியில் 9 மாத கைக் குழந்தையை வைத்திருக்கும் தாயின் அருகே, மற்றொரு பெண் அமர்ந்திருக்கிறார்.  

அப்போது, அந்த 9 மாத பச்சிளம் குழந்தை அழுதுக்கொண்டிருக்கிறது. இந்த குழந்தையை பார்த்து முதலில் சிரித்த அந்த தாய், குழந்தை அழுவதை நிறுத்தாமல் தொடர்ந்து அழுதுகொண்டே இருந்ததால், திடீரென்று கோபம் அடைந்து அந்த குழந்தையின் கழுத்து பகுதியில் இரு கைகளையும் நெருக்கி பிடித்து, அந்த குழந்தையின் கழுத்தை நெறித்திருக்கிறார்.

அதன் பிறகு, அந்த குழந்தை இன்னும் சத்தமாக அழுத நிலையில், அந்த குழந்தையின் கன்னத்தில் அந்த கொடூரத் தாய் மாறி மாறி அறைந்திருக்கிறார். 

இதில், அந்த குழந்தை வலி பொறுக்க முடியாமல் இன்னும் சத்தம் போட்டு அலறி துடித்திருக்கிறது. 

இதனால், இன்னும் ஆவேசமும் கோபம் அடைந்த அந்த இறக்கமற்ற கல் நெஞ்சம் படைத்த அந்த கொடூரத் தாய், “தான் பெற்ற குழந்தை என்றும் பார்க்காமல், அந்த குழந்தையை தூக்கி படுக்கையில் வீசி எறி உள்ளார்.

இப்படி நெஞ்சை பதை பதைக்க வைக்கும் இந்த வீடியோவானது, அந்த குழந்தையின் தந்தை கவனத்திற்கு சென்று உள்ளது. இதனைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த அந்த தந்தை, அந்த ஊர் கிராமத் தலைவருடன் சேர்ந்து அங்குள்ள காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்து உள்ளார்.

இதனை தொடர்ந்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்த கொடூரத் தாயை கைது செய்தனர். பின்னர், அந்த 9 மாத பச்சிளம் குழந்தை, அதன் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தையின் தாயிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடந்தி வருகின்றனர்.

இந்த வீடியோவது, இணையத்தில் வெளியான நிலையில், அந்த கொடூர தந்தைக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment