பெண்ணை வேட்டையாடி 5 பேர் வெறியாட்டம்! கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய கொடூரம்..

பெண்ணை வேட்டையாடி 5 பேர் வெறியாட்டம்! கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய கொடூரம்.. - Daily news

திருமணமான பெண்ணை வேட்டையாடிய 5 பேர் கொண்ட கும்பல், அவரை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து, அதனை வீடியோ எடுத்து மிரட்டி வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் நெல்லை மாவட்டத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

அதாவது, திருநெல்வேலி மாவட்டம் இட்டமொழி பகுதியைச் சேர்ந்த 38 வயதான பெண் ஒருவர், திருமணமாகி தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். 

இந்த பெண் அடிக்கடி, தனது வீட்டின் அருகில் உள்ள ஒரு வனப்பகுதிக்குச் சென்று, விறகு சேகரிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். அப்படி, அந்த பெண் அடிக்கடி விறகு சேகரிக்க சென்ற போது, அதே பகுதியைச் சேர்ந்த நாகலிங்கம் என்பவர், இந்த பெண்ணை தொடர்ச்சியாக கண்காணித்து வந்து உள்ளார். 

அதன் படி, சம்பவத்தன்று அந்த பெண் எப்போதும் போல் அங்குள்ள வன பகுதியில் விறகு சேகரிக்க சென்றிருக்கிறார். அப்போது, நாகலிங்கம் தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து, அந்த பெண்ணை பின் தொடர்ந்து சென்றிருக்கிறார்.

அந்த நேரத்தில், அங்கு ஆள் நடமாட்டம் யாரும் இல்லாத நிலையில், அந்த அடர்ந்த காட்டுப் பகுதியில் அந்த பெண்ணை வழிமறித்த அந்த 5 பேரும், அந்த பெண்ணின் வாயைப் பொத்தி, அந்த காட்டுக்கள் இன்னும் சிறிது தூரம் தூக்கிச் சென்று அவரை தாக்கி, வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள்.

மேலும், அந்த 5 பேரும், அந்த பெண்ணை பலாத்காரம் செய்யும் போது செல்போனில் அவர்கள் வீடியோவும் எடுத்து, கடுமையாக மிரட்டி உள்ளனர்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண், ஒரு கட்டத்தில் இருந்து அந்த கும்பலிடம் மிரட்டலை அடுத்து வீடு திரும்பிய நிலையில், இந்த கொடுமைகள் குறித்து திசையன்விளை காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், இது குறித்து விசாரணை நடத்திய நிலையில், நாகலிங்கம் என்பவரோடு இணைந்து 2 இளைஞர்கள், 2 சிறார்கள் உள்ளிட்ட 5 பேர் தான், அந்த பெண்ணை கூட்டுப் பாலியில் பலாத்காரம் செய்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. 

இதனையடுத்து, நாகலிங்கத்தை அதிரடியாக கைது செய்த போலீசார், தற்போது தலைமறைவாக இருக்கும் மேலும் 4 பேரையும் கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

இதனிடையே, திருமணமான ஒஐ பெண்ணை 5 பேர் கொண்ட ஒரு கும்பல் சேர்ந்து, கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பீதியையம் ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment