லாரி மோதி கர்ப்பிணி பெண் காவலர் பலி!

லாரி மோதி கர்ப்பிணி பெண் காவலர் பலி! - Daily news

திண்டுக்கல் அருகே சாலையோரம் நின்ற சரக்கு லாரியின் மீது கார் மோதிய விபத்தில் நிறைமாத கர்ப்பிணியான பெண் காவலர் பரிதாபமாக உயிரிழந்தார். 

திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியை சேர்ந்தவர் சதிஷ்குமார். இவர் முசிறி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சுகந்தி வயது 26 ஆகும். சுகந்தி, திருச்சி மாவட்டம் காட்டுப்புத்துர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். சுகந்தி தற்போது 9 மாத கர்ப்பிணியாக இருந்துவந்துளார். இந்நிலையில் நேற்றிரவு கணவன் - மனைவி இருவரும் சுகந்தியின் சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டம் வக்கம்பட்டிக்கு காரில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர். 

இந்நிலையில் சுகந்தி மற்றும் அவரது கணவர் காரில் நேற்று நள்ளிரவு திண்டுக்கல் - வத்தலகுண்டு புறவழிச் சாலையில் உள்ள குட்டியபட்டி என்ற இடத்தின் அருகே சென்றபோது, எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்றிருந்த சரக்கு லாரியின் மீது கார் அதிவேகமாக மோதியது. இந்த விபத்தில் காரின் முன்பகுதியில் அமர்ந்திருந்த சுகந்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சதிஷ்குமார் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

அதனைத்தொடர்ந்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த திண்டுக்கல் தாலுகா போலிசார், சுகந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காயமடைந்த  சதிஷ்குமாரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து, இந்த விபத்து குறித்து போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Comment