கேரள வரதட்சணை கொடுமை வழக்கில் கணவருக்கு 10 ஆண்டு சிறை! ரூ.12 லட்சம் அபராதம்!!

கேரள வரதட்சணை கொடுமை வழக்கில் கணவருக்கு 10 ஆண்டு சிறை! ரூ.12 லட்சம் அபராதம்!! - Daily news

வரதட்சணை கொடுமையால் கேரளவைச் சேர்ந்த விஸ்மயா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அதிரடி திருப்பமாக, “அந்த பெண்ணின் கணவனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், 12 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டு உள்ள சம்பவம் பெரும் வைரலாகி வருகிறது.

அதாவது, கேரளாவை சேர்ந்த விஸ்மயா என்ற இளம் பெண், வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்ட செய்தி, நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த வழக்கில் குற்றவாளிகள் பற்றி, அந்த மாநில நிதிமன்றம் நேற்று அதிரடியாக அறிவித்தது.

அந்த வகையில், கேரள மாநிலத்தில் கொல்லம் கைத்தொடு பகுதியைச் சேர்ந்த விக்ரமன் நாயரின் மகளான 22 வயது விஸ்மயா என்ற பெண், ஆயுர்வேத கல்லூரியில் மருத்துவம் இறுதியாண்டு படித்து வந்தார்.

இந்த சூழலில் தான், சஸ்தம்கோட்டா பகுதியைச் சேர்ந்த கிரண்குமார் என்பவரோடு கடந்த 2 ஆண்டுகளுக்கு முனபு விஸ்மயாவிற்கு திருமணம் நடந்தது.  இந்த திருமணத்திற்கு விஸ்மயாவின் தந்தை விக்ரமன் நாயர், 100 சவரன் நகை, ஒரு ஏக்கர் நிலமும் 10 லட்ச ரூபாய் மதிப்பிலான ஒரு காரும் கிரன் குமாருக்கு வழங்கி இருந்தார். 

இதனையடுத்து, வரதட்சணையாக கொடுக்கப்பட்ட கார் பிடிக்கவில்லை என்றும், இதனால் அந்த காருக்குப் பதிலாக 10 லட்சம் ரூபாய் ரொக்கமாக வழங்கும்படி கிரண்குமார் கேட்டு உள்ளார். இதற்கு அந்த பெண் விவிஸ்மயாவின் வீட்டினர் மறுப்பு தெரிவித்ததால், விஷ்ணுகுமார் வரதட்சணை கேட்டு விஸ்மயாவை தொடர்ந்து கொடுமைப்படுத்தி இருக்கிறார்.

மேலும், விஸ்மயாவை தகாத வார்த்தைகளால் பேசி, பயங்கரமாக அடித்து உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மிகவும் மோசமாக துன்புறுத்தி வந்தார் என்றும் கூறப்பட்டது. இப்படியே பல நாட்கள் இந்த கொடுமைகள் தொடர்ந்த நிலையில், இறுதியாக இந்த வரதட்சணை கொடுமையின் கோரப் பசிக்கு விஸ்மயா பலியானார் என்பதே உண்மை. 

குறிப்பாக, விஸ்மயாவை அடித்து துன்புறுத்திய புகைப்படங்களை, தனது வீட்டாருக்கு அவர் வாட்ஸ்அப் மூலமாக தெரிவித்த விஸ்மயா மிகுந்த மன வேதனையில், குளியல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

முக்கியமாக, விஸ்மயா கடந்த ஆண்டு ஜூன் மாதம் தற்கொலை செய்து உயிரிழந்திருந்தார். கேரளாவையே உலுக்கிய இந்த வரதட்சணை கொடுமை சம்பவத்தை அடுத்து, கிரண் குமார் அதிரடியாக கைது செய்யப்பட்ட நிலையில், அவரை அரசு பணியில் இருந்து அம்மாநில அரசு அதிரடியாக டிஸ்மிஸ் செய்தது.

இதனையடுத்து, “விஸ்மயா மரணத்திற்கு கிரண் குமார் குடும்பத்தினரும் காரணம்” என்று, விஸ்மயா பெற்றோர் பகிரங்கமாக குற்றஞ்சாட்டினர். அதன் பின்னர், இந்த வழக்கு தொடர்பாக 42 சட்சியங்களிடம் விசாரிக்கப்பட்ட நிலையில், 108 ஆவணங்கள், சில தொலைப்பேசி அழைப்பு பதிவுகளையும் போலீசார்  நீதிமன்றத்தில் சமர்பித்தனர். 

இந்த வழக்கை விசாரித்து வந்த கொல்லம் கூடுதல் அமர்வு நீதிமன்றம், “விஸ்மயா மரணத்தில், அவரது கணவர் கிரண் குமார் தான் குற்றவாளி” என்று, நேற்றைய தினம் அதிரடியாக அறிவித்தது. 

முக்கியமாக, “குற்றவாளியின் தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்படும்” என்றும், நீதிபதி சுஜித் கூறியிருந்த நிலையில், இன்றைய தினம் இந்த வழக்கில் தண்டனை பற்றிய முக்கிய விபரங்களை நீதிபதி அறிவித்தார்.

இது தொடர்பாக தீர்ப்பை அறிவித்த நீதிபதி, “விஸ்மயாவின் கணவர் கிரண் குமார் தான் குற்றவாளி. வரதட்சணை கொடுமை, உடல் அல்லது மனநலப் பாதிப்பை ஏற்படுத்துதல், தற்கொலைக்குத் தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கிரண் குமார் குற்றவாளி என தீர்ப்பளிக்கபடுகிறது” என்று, தெரிவித்தார்.

மேலும், இந்த வழக்கில் தண்டனை விவரத்தை பட்டியிலிட்ட நீதிபதி, “குற்றவாளிக்கு 10 வருட சிறைத்தண்டனையும், 12.50 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுவதாக” அறிவித்தார். 

அத்துடன், “இந்த அபராதத் தொகையில் 2 லட்சம் ரூபாயை விஸ்மயாவின் பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும்” என்றும், நீதிபதி  உத்தரவிட்டார்.

இதன் மூலம், கிரண் குமாருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை என்பது தற்போது உறுதியாகி உள்ளது.

இதனிடையே, கேரள மாநிலத்தில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட விஸ்மயா வழக்கில், அவரது கணவருக்கு தற்போது தண்டனைகள் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு பற்றிய செய்தி, தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

Leave a Comment