“நீ வாடா.. என் புருஷனை போட்டுத் தள்ளலாம்..” கள்ளக் காதலனை அழைத்த கள்ளக் காதலி!

“நீ வாடா.. என் புருஷனை போட்டுத் தள்ளலாம்..” கள்ளக் காதலனை அழைத்த கள்ளக் காதலி! - Daily news

தனது கள்ளக் காதலை கண்டுப்பிடித்த கணவனை, கள்ளக் காதலன் உடன் சேர்ந்து மனைவியே கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் சிரா தாலுகா காலசிவனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜு என்பவர், அந்த பகுதியில் விவசாயி வேலைகளை செய்து வந்தார். 

ராஜு, தனது மனைவி மீனாட்சி உடன் வசித்து வந்தார். 

திருமணத்திற்கு பிறகு ராஜுவுக்கு குடிப் பழக்கம் அதிகமானதால், அவர் அடிக்கடி குடிக்கத் ஆரம்பித்து, ஒரு கட்டத்தில் குடிக்கு முற்றிலுமாக அடிமையாகி உள்ளார். இதன் காரணமாக, அவர் தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மட்டையாகி விடுவார் என்றும் கூறப்படுகிறது. 

இதனால், அவரது மனைவியான மீனாட்சி, தனது கணவனை வெறுத்து வந்த நிலையில், அந்த நேரத்தில் அந்த பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவருடன் அறிமுகம் ஏற்பட்ட, அவருடன் பழகி வந்திருக்கிறார்.

இவர்களின் பழக்கம், நாளடைவில் கள்ளக் காதலாக மாறி உள்ளது. இதனால், அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது.

குறிப்பாக, தினமும் கணவன் ராஜு குடித்து விட்டு வீட்டிற்கு வந்தது மட்டையானதும், ஒரு கட்டத்தில் தனது கள்ளக் காதலன் ராஜேஷை தனது வீட்டிற்கு வரவழைத்து, அவருடன் மீனாட்சி உல்லாசமாக இருந்து வந்திருக்கிறார். இப்படியான, இவர்கள் உல்லாச வாழ்க்கை பல மாதங்களாக தினமும் தொடர்ந்து வந்திருக்கிறது.

இப்படியாக, கணவன் கடும் போதையில் மட்டையாகி தூங்கியதும், கள்ளக் காதலனை தனது வீட்டிற்கே அழைத்து, அவருடன் ரகிசயமாக வாழ்ந்து வந்த இந்த கள்ளக் காதல் விவகாரம், ஒரு நாள் கணவன் ராஜுக்கு தெரிய வந்திருக்கிறது.

அதாவது, போதையில் வழக்கம் போல் மட்டையாகி தூங்கிய கணவன் ராஜு, நடு ராத்திரியில் திடீரென்று கண் விழித்து தனது மனைவியை தேடிய போது, அவரோ கள்ளக் காதலுடன் உல்லாச இன்பத்தில் இருந்து, கையும் களவுமாக மாட்டிக்கொண்டதாக கூற்படுகிறது.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த ராஜு, தனது மனைவியை கண்டித்த நிலையில், கணவன் - மனைவி இடையே பிரச்சனை வெடித்து உள்ளது.

அப்போது, தனது கணவனை போட்டுத் தள்ள அவரது மனைவி மீனாட்சி முடிவு செய்த நிலையில், தனது கள்ளக் காதலன் ராஜேஷ் உடன் சேர்ந்து அவரை கொலை, இருவரும் சேர்ந்து திட்டம் போட்டு உள்ளனர். 

திட்டமிட்டபடி, ஒரு நாள் கணவன் ராஜு, கள்ளக் காதல்ன ராஜேஷ் உடன் சேர்ந்து குடித்திருக்கிறான். அப்போது, ராஜுவுக்கு அளவுக்கு அதிகமாக மது ஊற்றி கொடுத்த நிலையில், அவர் அதனை குடித்துவிட்டு வழக்கம் போல் மட்டையாகி உள்ளார்.

இதனையடுத்து, அவரது மனைவியும் கள்ளக் காதலனும் சேர்ந்து, அவரை கொடூரமாக கொலை செய்து உள்ளனர்.

இந்த கொலை சம்பவம் குறித்து போலீசாருக்குத் தெரிய வந்த நிலையில், இது தொடர்பாக வழக்கப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் தான், மனைவியின் கள்ளக் காதல் விசயம் தெரிய வந்தது. இதனையடுத்து, கணவனை கொலை செய்த அவரது மனைவி மீனாட்சி மற்றும் கள்ளக் காதலன் ராஜேஷ் ஆகியோரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. 

Leave a Comment