மாணவியை ஆபாசமாக படம் எடுத்து கைதான இராணுவ வீரர்!

மாணவியை ஆபாசமாக படம் எடுத்து கைதான இராணுவ வீரர்! - Daily news

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே கல்லூரி மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கில் தலைமறைவாக இருந்த ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே உள்ள இடைக்கோடு பகுதியை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவர் அங்குள்ள கல்லூரியில் படித்து வரும் நிலையில், மாதச்சீட்டும் நடத்தி வந்துள்ளார். இதில நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், மாணவி, அதே பகுதியை சேர்ந்த ராணுவ வீரரான 30 வயது  சஜித் என்பவரிடம் பணம் வேண்டி உதவி கோரியுள்ளார். அவருக்கு உதவிசெய்தாக கூறிய சஜித், மாணவியுடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். நாளடைவில் இருவரும் நெருங்கி பழகிய நிலையில் வாட்ஸ் அப்பில் வீடியோ கால் மூலம் பேசி வந்துள்ளனர். 

இந்நிலையில் சுஜித் மாணவியை ஆபாசமாக படம் எடுத்து  அதனை காட்டி மிரட்டி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அத்துடன் மாணவியின் ஆபாச படங்களை தனது நண்பர்களுக்கும் அனுப்பிய நிலையில், அவர்களும் மாணவியை மிரட்டி உள்ளனர். இதனால் அதிர்ச்சிக்குள்ளான மாணவி, மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

மேலும் அதனைத்தொடர்ந்து  மகளிர் போலிசார் ராணுவ வீரர் சஜித், அவரது நண்பர்கள் ஜான் பிரிட்டோ வயது 33, கிரீஷ் வயது 29, லிபின் ஜான் வயது 32 ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, ஜான் பிரிட்டோ, லிபின் ஜான் ஆகியோரை கைது செய்தனர். மேலும், தப்பியோடிய ராணுவ வீரர்கள் சஜித், கிரீஷ் ஆகியோரை தேடி வந்தனர். இந்த நிலையில், தலைமறைவாக இருந்த ராணுவ வீரர் சஜித்தை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் தொடர்ந்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Comment