“3 வது மனைவியும் ஓடிபோயிட்டா.. நான் என்ன சார் பண்றது..?” கணவன் வாக்குமூலம்..

“3 வது மனைவியும் ஓடிபோயிட்டா.. நான் என்ன சார் பண்றது..?” கணவன் வாக்குமூலம்.. - Daily news

“என் 3 வது மனைவியும் யார் கூடயாவது ஓடிபோயிட்டா நான் என்ன சார் பண்றது, அதான் கொண்ணுட்டேன்..” என்று, மனைவியை கொன்ற கணவன் வாக்குமூலம் அளித்துள்ள சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர் அடுத்து உள்ள குச்சிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த விஜய ராஜுக்கும், அந்த பகுதியைச் சேர்ந்த மேனகாவுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதல் ஏற்பட்டு உள்ளது.

இவர்களது காதல், அடுத்த கட்டத்தை எட்டிய நிலையில், இவர்கள் காதலிக்கத் தொடங்கிய அடுத்த 3 மாதங்களில் இவர்களுக்கு திருமணம் நடந்து உள்ளது.

இந்த திருமணமானது, விஜய ராஜுக்கு நடந்த 3 வது திருமணமாகும். 

இதற்கு முன்னதாக, கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பாக முதல் திருமணம் செய்துகொண்டவர் விஜயராஜ், கணவன் விஜயராஜ் விட்டு விட்டு, அவரது மனைவி வேறு ஒரு நபருடன் வீட்டை விட்டு ஓடிச் சென்றிருக்கிறார்.

அதன் பிறகு, 3 ஆண்டுகளுக்குப் பிறகு விஜயராஜ், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார். ஆனால், அந்த பெண்ணிடம் அடிக்கடி பிரச்சினை செய்து வந்ததால், அந்த பெண்ணும் வாழப் பிடிக்காமல் அவரும் ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு சென்றிருக்கிறார்.

இந்த நிலையில் தான், விஜயராஜ், 3 வதாக மேகனா என்ற காதலித்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக திருமணம் செய்த நிலையில், ஒனறாக வாழ்ந்து வந்தனர்.

திருமணத்திற்கு பிறகு, அவரது 3 வது மனைவி மீது விஜயராஜ் க்கு, சந்தேகம் வந்து உள்ளார். 

அதற்கு தகுந்தார் போல், அவரது மனைவியும் எந்நேரமும் செல்போனில் யாரிடமாவது பேசிக்கொண்டே வந்ததாக கூறப்படுகிறது. 

இது தொடர்பாக கணவன் - மனைவிக்குள் அடிக்கடி சண்டை வந்த நிலையில், ஒரு கட்டத்தில் குடி போதையில் தனது மனைவியை விஜயராஜ், அடித்து துன்புறுத்திய நிலையில், வீட்டில் இருந்த பிளாஸ்டிக் பைப்பை எடுத்து அடித்து, “யாருடன் நீ அதிக நேரம் செல்போனில் பேசுகிறாய்?” என்று, தொடர்ந்து அடித்திருக்கிறார். இப்படியான தொடர்ச்சியான தாக்குதலால், அவர் மனைவி மேனகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார்.
இப்படியாக, மனைவியை அடித்தே அவர் கொலை செய்திருக்கிறார்.

இதில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், மனைவியை கொலை செய்த கணவனை கைது செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் தான், “ என் 3 வது மனைவி அடிக்கடி செல்போனில் அதிக நேரம் யார் கூடயோ பேசி வந்ததால், எங்கே இவரும் என்னை விட்டு ஓடி விடுவாரோ என்ற சந்தேகத்தில், அவரை அடித்தே கொலை செய்துவிட்டேன்” என்று, வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த சமபவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment