அண்ணியை டூர் கூட்டி சென்ற மச்சினன்.. தொடர்ந்து பலாத்காரம் செய்த கொடூரம்..!

அண்ணியை டூர் கூட்டி சென்ற மச்சினன்.. தொடர்ந்து பலாத்காரம் செய்த கொடூரம்..! - Daily news

அண்ணியை ஊர் ஊராக டூர் கூட்டிச் சென்ற மச்சினன், அவரை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜார்கன்ட் மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ஜார்கன்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவருடன் தனிக்குடித்தனம் நடத்தி வந்திருக்கிறார்.

அப்போது, அந்த பெண்ணின் வீட்டிற்கு அந்த பெண்ணின் கணவருடைய தம்பியான 25 வயதான மைத்துனர், அடிக்கடி வந்து சென்று உள்ளார்.

அப்போது, அந்த மச்சினன், தனது அண்ணன் மனைவி மீது சபலப்பட்டு, அவரை எப்படியாவது பாலியல் பலாத்காரம் செய்ய வேண்டும் என்று திட்டம் போட்டு உள்ளார். 

இதன் காரணமாக, அந்த மச்சினன் அடிக்கடி தனது அண்ணன் வீட்டிற்கு சென்று, தனது அண்ணியிடம் நெருங்கிப் பழகுவதை குறியாக வைத்திருந்து உள்ளான்.

அதே நேரத்தில், தனது அண்ணன் அடிக்க வெளியூர் சென்று வருவதால், அவருடைய மனைவியை எங்கேயும் வெளியில் அழைத்துச் செல்லாமல் இருந்து உள்ளார்.

இந்த சூழலை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அந்த மச்சினன், தனது அண்ணன் மனைவியான அண்ணியை, விடுமுறைக்காக டெல்லி மற்றும் பாட்னாவுக்கு அழைத்துச் செல்ல யோசனை கூறி உள்ளான். 

மச்சினன் கேட்கவும், “தனது கணவனின் தம்பி தானே” என்று, நம்பி, அந்த பெண்ணும் டூர் செல்ல சம்மதம் தெரிவித்து உள்ளார்.

அதன்படி, தனது மச்சினனை நம்பி, அந்த பெண்ணும் உடன் சென்ற நிலையில், அங்கிருந்து புறப்பட்ட அந்த மச்சினன், அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் ரூம் போட்டு தங்கிய நிலையில், அங்கு வைத்து தனது அண்ணியை அவன் பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்து உள்ளான்.

இதனையடுத்து, அங்கிருந்து தனது அண்ணியை டெல்லிக்கு அழைத்துச் சென்ற அந்த மச்சினன், டெல்லியில் 2 நாட்கள் தங்க வைத்து, அங்கும் தொடர்ச்சியாக தனது அண்ணியை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறான்.

அதன் தொடர்ச்சியாக, அங்கிருந்து கொல்கத்தாவுக்கு தனது அண்ணியை அழைத்துக்கொண்டு சென்ற அவன், அங்கு வைத்தும் தனது அண்ணியை மிரட்டி மிரட்டியே தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்திருக்கிறான்.

இப்படியாக, தனது பாலியல் இச்சைகள் எல்லாம் தீர்ந்த பிறகு, கடந்த 4 ஆம் தேதி தனது அண்ணியுடன் அவன், ராஞ்சிக்கு ஊர் திரும்பி உள்ளான்.

ஊர் திரும்பியதும், அங்குள்ளரயில் நிலையத்தில் வைத்து, “இந்த பாலியல் பலாத்கார சம்பவம் பற்றி யாரிடமாவது நீ சொன்னால், உன்னையும், உன் குடும்பத்தினரையும் மொத்தமாக கொன்று விடுவேன்” என்று, கடுமையாக மிரட்டிவிட்டு, அதன் பிறகே அந்த பெண்ணை வீட்டில் வந்து விட்டிருக்கிறான். இதனையடுத்து, அங்கிருந்து நைசாக தப்பித்துச் சென்று, தலைமறைவாகி இருக்கிறான்.

வீட்டிற்கு வரும் வரை பயந்து இருந்த அந்த பெண், வீடு திரும்பயதும், தனக்கு நேர்ந்த பாலியல் பலாத்காரம் குறித்து, தனது கணவரிடம் அழுதுகொண்டே எல்லாவற்றையும் கூறி உள்ளார். 

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த அந்த கணவன், இது குறித்து உடனடியாக அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாகி உள்ள அந்த மச்சினனை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment