குழந்தை சரியாக பாடம் படிக்காததால் கண்டித்த மனைவியை கத்தியால் குத்திய கணவர்...!

குழந்தை சரியாக பாடம் படிக்காததால்  கண்டித்த மனைவியை கத்தியால் குத்திய கணவர்...! - Daily news

குழந்தை சரியாக பாடம் படிக்காததால் கண்டித்த மனைவியை அவரது கணவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

crime

மும்பை சாஸ்திரி நகரை சேர்ந்த அவினாஷ் வர்பே – ஜெயஸ்ரீ தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன் – மனைவிக்கு இடையே சிறுசிறு பிரச்னைகளுக்காக அவ்வப்போது சண்டை வருவது வழக்கம் தான். இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை இரவு ஜெயஸ்ரீ தனது குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் கற்றுக்கொண்டுத்துள்ளார். அப்போது, குழந்தை சரியாக பாடம் கற்காமல் இருந்துள்ளது. இதனால், குழந்தையை ஜெயஸ்ரீ அடித்துள்ளார். அப்போது, வீட்டில் இருந்த கணவர் அவினாஷ் தனது மனைவி குழந்தைகளை அடிப்பதால் ஆத்திரமடைந்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.  இதனால் ஆத்திரம் அடைந்த அவினாஷ் மனைவியுடன் சண்டையிட்டுள்ளார்.

வாக்குவாதம் முற்றிய நிலையில் மனைவி ஜெயஸ்ரீயை அவினாஷ் வீட்டில் இருந்த கத்தியால் பல முறை சரமாரியாக குத்தினார். குழந்தைகள் கண்முன்னே நடந்த இந்த சம்பவத்தில் ஜெயஸ்ரீயின் கழுந்து மற்றும் வயிறு பகுதியில் கத்தியால் குத்தப்பட்டது. கத்தியால் குத்தப்பட்ட ஜெயஸ்ரீ ரத்த வெள்ளத்தில் சரிந்தார். குழந்தைகள் கண்முன்னே கத்தியால் குத்தப்பட்ட ஜெயஸ்ரீ ரத்த வெள்ளத்தில் சரிந்தார். ஜெயஸ்ரீயின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தின் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். 

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ஜெயஸ்ரீயை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசார் வருவதற்கு முன்பே அவினாஷ் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் ஜெயஸ்ரீயின் கணவர் அவினாஷிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

Leave a Comment