இந்து அமைப்பைச் சேர்ந்த நிர்வாகி வெட்டிக் கொலை - கர்நாடகாவில் 144 தடை உத்தரவு!

இந்து அமைப்பைச் சேர்ந்த நிர்வாகி வெட்டிக் கொலை - கர்நாடகாவில் 144 தடை உத்தரவு! - Daily news

இந்து அமைப்பை சேர்ந்த நிருவாகி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார் இதனால் கர்நாடகாவில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

சிவமொக்காவில் நள்ளிரவில் இந்து அமைப்பு பிரமுகர் படுகொலை செய்யப்பட்டார். இதனால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதால் போலீசார் தடியடி நடத்தினார்கள். இதன் காரணமாக அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.

சிவமொக்கா நகர் சி.கே.கட்டி பகுதியை சேர்ந்தவர் ஹர்ஷா அவருக்கு வயது 24. இவர் பஜ்ரங்தள் என்ற இந்து அமைப்பு பிரமுகர் ஆவார். இந்த நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் ஹர்ஷா, தொட்டபேட்டை போலீஸ் எல்லைக்குட்பட்ட பாரதி காலனி ரவிவர்மா வீதி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை 4 பேர் கும்பல் வழிமறித்தது.

இந்நிலையில் அவர்களிடம் இருந்து ஹர்ஷா தப்பிக்க முயன்றார். ஆனாலும் மர்மநபர்கள் தாங்கள் வைத்திருந்த பயங்கர ஆயுதங்களால் ஹர்ஷாவை தாக்கி படுகொலை செய்தனர். பின்னர் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

மேலும் இதுபற்றிய தகவல் அறிந்ததும் தொட்டபேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் கொலையான ஹர்ஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மெக்கான் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் இந்து அமைப்பு பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப்பகுதியில் காட்டுத்தீயாக பரவியது.

அதனைத்தெடர்ந்து இதனால் இருதரப்பினர் அங்கு குவிந்தனர். அந்த சமயத்தில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதுபற்றி அறிந்ததும் அங்கு வந்த போலீசார், இருதரப்பினரையும் தடியடி நடத்தி விரட்டி அடித்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. இந்து அமைப்பு பிரமுகர் படுகொலை செய்யப்பட்டதால் சிவமொக்கா நகரில் பதற்றமான சூழல் நிலவியது. இதனால் நகரில் பல பகுதிகளில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டுள்ளனர். ஹர்ஷாவை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை செய்தனர்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து தொட்டபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

கர்நாடகத்தில் கடந்த சில தினங்களாக ‘ஹிஜாப்’ விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இதனால் இந்த விவகாரத்தில் கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கிறப்படுகிறது. இந்த கோணத்திலும் போலீசார் விவசாரணை நடத்தி வருகிறார்கள். சிமோகா நகரில் பதற்றமான சூழல் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment