விருப்பம் இல்லாத பெண்ணை கட்டாயப்படுத்தி திருமணம்-இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

விருப்பம் இல்லாத பெண்ணை கட்டாயப்படுத்தி திருமணம்-இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை! - Daily news

திருமணத்தில் விருப்பம் இல்லாத பெண்ணை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை வடக்கு கொரட்டூர் அக்ரகாரம் பகுதியை சேர்ந்தவர் கவிதா. இவரது மகள் சந்தியா அவருக்கு வயது 22. பி.காம் பட்டப்படிப்பு முடித்துள்ளார். இவருக்கு நல்ல உத்தியோகத்திற்கு செல்ல ஆசை அதனால் TNPSC தேர்வு எழுதுவதற்காக, கோசிங் சென்டரில் படித்து வந்தார். இவரது உறவினரான சேலத்தைச் சேர்ந்த ராஜா என்பவர், சென்னையில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரும் டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுத விரும்பி, சந்தியாவின் கோச்சிங் சென்டரிலேயே வந்து சேர்ந்தார்.

இந்நிலையில் தான் சந்தியாவை ராஜாவுக்கு திருமணம் செய்து வைக்க கவிதா முடிவு செய்தார். இதனை அடுத்து, கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் 7-ம் தேதி வில்லிவாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சந்தியா- ராஜா இருவருக்கும் பதிவு திருமணம் நடந்தது. ஆனால், சந்தியாவோ, ஆவடியை சேர்ந்த  இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த காதல் விவகாரத்தை தன்னுடைய அம்மா கவிதாவிடம் சொன்னார் ஆனால், அவர் சம்மதம் தெரிவிக்கவில்லை திருமணத்துக்கு கட்டாயப்படுத்தப்பட்டார் சந்தியா.

அதனைத்தொடர்ந்து கடந்த 4-ம் தேதி சந்தியா- ராஜா திருமணம் முறைப்படி சேலத்தில் பெற்றோர் சம்மதத்துடன் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு, ராஜா- சந்தியா ஆகியோர் கொரட்டூருக்கு மறுவீட்டிற்கு  திரும்பினர் இந்நிலையில் சந்தியா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனை கணவர் ராஜாவும், அம்மா கவிதாவும் நேரடியாகவே பார்த்துவிட்டு, மகளை மீட்டனர் உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகவும் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி சந்தியா பரிதாபமாக இறந்துவிட்டார்.

மேலும் இந்த புகாரின் அடிப்படையில் கொரட்டூர் காவல் ஆய்வாளர்   கிருஷ்ணமூர்த்தி தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், சந்தியாவுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது உறுதியானது.. மேலும், சந்தியாவிற்கு திருமணமாகி ஒரு வாரமே ஆகிறதால் ஆர்டிஒ விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்த தற்கொலை சம்பவம் கொரட்டூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
 

Leave a Comment