பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தை போக்சோ கைது!

பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தை போக்சோ கைது! - Daily news

சென்னை புழல் அருகே பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தையை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

சமீப காலமாக பெண்கள் குழந்தைகள் மீது தொடர் பாலியல் வன்முறை செய்திகள் அதிகளவில் வந்தவண்ணம் உள்ளன. இதில் பெரும்பாலும் பதினெட்டு வயதிற்கு கீழ் உள்ள மாணவர்களே அதிகம் பாலியல் வன்முறையில் ஈடுபடுகின்றனர். இதில் பெண்களும், குழந்தைகளுமே பெரும்பாலும் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். 

இந்நிலையில் புழல் அடுத்த வினாயகபுரம் காஞ்சி நகரில் வசித்து வருபவர் சையத் சர்பிராஸ் நவாஸ். இவர் காங்கிரஸ் கட்சியின் பிரமுகராக இருந்து வருகிறார். இந்நிலையில் தனது 14 வயது மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக சிறுமியின் தாய் புழல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து தந்தை சையத் சர்பிராஸ் நவாஸிடம்  விசாரணை நடத்தியதில், அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டார். தீவிர விசாரணை நடத்தியதில் அவர் மீது பல குற்ற வழக்குகள் உள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

அதனைத்தொடர்ந்து புதுச்சேரி, உழவர்கரை பகுதியை சேர்ந்தவர் சதீஷ் வயது 32. இவர் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியும், மகளும் உள்ளனர். சதீஷுக்கும், இவருடைய மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. 

இதன் காரணத்தால், கணவரிடம் சண்டைப்போட்டுக்கொண்டு மனைவி, தனது 5 வயது மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். குழந்தையை பார்க்க மனைவி வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து, தனது 5 வயது மகளை அழைத்து கொண்டு, கிருமாம்பாக்கம் பகுதியில் உள்ள அக்கா வீட்டிற்கு சதீஸ் சென்றிருக்கிறார். அப்போது, தனது 5 வயது மகளுக்கு சதீஷ் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பிறகு வீட்டிற்குள் வந்த குழந்தை அழுதுக்கொண்டே இருந்ததால், தாய் குழந்தையிடம் விசாரித்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து குழந்தையிடம் விசாரித்ததில் ஐந்து வயது குழந்தை அப்பா வந்து என்னிடம்... என்று அழுதுக்கொண்டே தனது தாயிடம் தெரிவித்துள்ளது. குழந்தை சொன்னதைக் கேட்ட தாய் அதிர்ச்சி அடைந்தார். மேலும் அதனைத்தொடர்ந்து தனது கணவர் மீது உடனடியாக கிருமாம்பாக்கம் காவல்நிலையத்தில் பாலியல் புகார் கொடுத்தார். மேலும் இது தொடர்பாக போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மனைவி காவல் நிலையத்தில் புகார் கொடுத்த தகவலை அறிந்த சதீஷ் தற்போது தலைமறைவாகியுள்ளார். சதீஷ்யை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ரெட்டியார்பாளையம் பகுதியில் நடந்த பாலியல் வழக்கில் கைதாகி சிறை சென்ற சதீஷ், 15 நாட்களுக்கு முன்பு தான் ஜாமீனில் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தைகள் மீது பாலியல் வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்டங்களை கொண்டு தண்டனை பெற்று தரவேண்டும் என்பதே அனைவரது எண்ணமாக உள்ளது. 

Leave a Comment