20 பெண்களை காதலித்து கற்பமாக்கிய காம கோடாங்கி!

20 பெண்களை காதலித்து கற்பமாக்கிய காம கோடாங்கி! - Daily news

20 பெண்களை காதலித்து, அவர்களை கற்பமாக்கிய குற்றச்சாட்டில் சிக்கிய காம கோடாங்கியை, போலீசார் அதிரடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்து உள்ளனர். 

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

சென்னை புரசைவாக்கம் மில்லர்ஸ் சாலை பகுதியைச் சேர்ந்த 26 வயதான முகமது செய்யது என்பவர், விளம்பர படங்களில் நடித்து வந்தார்.

அப்போது, தன்னுடன் நடித்த சக மாடலிங் பெண்களை அவர், தனது காதல் வலையில் வீழ்த்தி இருக்கிறார். 

இப்படியாக, தன்னும் நடித்த பல அழகான இளம் பெண்களை தனது காதல் வலையில் வீழ்த்திய 26 வயதான முகமது செய்யது, அவர்களிடம் ஆசை வார்த்தைகள் பேசி, அவர்களின் கற்பையும் சூறையாடியதாகவும் குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

இப்படியாக, 26 வயதான முகமது செய்யதுவால் பாதிக்கப்பட்ட 3 இளம் பெண்கள், சென்னை காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவாலிடம் புகார் அளித்தனர். 

அத்துடன், பாதிக்கப்பட்ட இளம் பெண்கள் அளித்த புகாரில், “மாபெரும் காதல் மன்னனாக வலம் வந்த மாடல் அழகன் முகமது செய்யதுவிடம், கிட்டதட்ட 20 க்கும் மேற்பட்ட பெண்கள், அவர்களது கற்பை இழந்து உள்ளதாகம்” குற்றம்சாட்டி உள்ளனர்.

இந்த புகாரைின் பேரில் போலீஸ் கமிஷனர் அதிரடியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

அதன் பேரில், சென்னை கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் கார்த்திகேயன் மேற்பார்வையில், வேப்பேரி உதவி கமிஷனர் அரிக்குமார், அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா ஆகியோர் இந்த புகார் குறித்து விசாரித்து வந்தனர். 

அதன்படி, 20 க்கும் மேற்பட்ட இளம் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி, அவர்களின் கற்பை சூரையாடிய காதல் மன்னன் முகமது செய்யது மீது பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதனையடுத்து, காம கோடங்கி முகமது செய்யதுவை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட, பின்னர் நீதிமன்ற காவலில் அவர் சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

அதன் தொடர்ச்சியாக, 20 க்கும் மேற்பட்ட இளம் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி, அவர்களின் கற்பை சூரையாடிய முகமது செய்யது மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க, உதவி கமிஷனர் அரிக்குமார், இன்ஸ்பெக்டர் கலா ஆகியோர் சிபாரிசு செய்த நிலையில், இதனை ஏற்றுக்கொண்ட முகமது செய்யது மீது, தற்போது குண்டர் சட்டமும் பாய்ந்து உள்ளது. 

காதல் மன்மதன் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தற்போது அதிரடியாக உத்தரவிட்டு உள்ளார். 
அந்த வகையில், குண்டர் சட்டத்தில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட முகமது செய்யது, ஒரு ஆண்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும், காதல் மன்மதன் முகமது செய்யதுவால் மேலும் வேறு யாரெல்லாம் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பது குறித்து, போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், இந்த பாதிக்கப்பட்ட பெண்களின் பட்டியல் இன்னும் பெரிதாக வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.

Leave a Comment