குடித்துவிட்டு தகராறு செய்த அண்ணன்.. தீர்த்துக்கட்டிய தம்பி!

குடித்துவிட்டு தகராறு செய்த அண்ணன்.. தீர்த்துக்கட்டிய தம்பி! - Daily news

திருச்சூர் அருகே குடித்துவிட்டு தகராறு செய்த அண்ணனை தம்பி உயிரோடு புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் திருச்சூர் சேர்ப்பு பகுதியை சேர்ந்தவர் பாபு அவரது வயது 38. பாபு அடிக்கடி குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்வது வழக்கம்.  மேலும் இதனால் ஆத்திரம் அடைந்த குடும்பத்தினர் தொடர்ந்து அவரை கண்டித்து உள்ளனர். ஆனால் பாபு கேட்பதாக இல்லை. 

இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வழக்கம் போல் பாபு குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து உள்ளார். எவ்வளவு சொல்லியும்  திருந்தாத அண்ணனை தீர்த்து கட்ட தம்பி திட்டம் போட்டுள்ளார்.

அதனைத்தொடர்ந்து சம்பவத்தன்று வீட்டில் தகராறு செய்த அண்ணனை தம்பி சாபு கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு அருகே உள்ள தோட்டத்தில் புதைத்து உள்ளார். பின்னர் ஒன்று தெரியாதது போல் அண்ணனை காணவில்லை என்று சேர்ப்பு போலீசாரிடம் தம்பி சாபு புகாரும் கொடுத்து உள்ளார். மேலும் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் தம்பி சாபுவிடம்  விசாரணை நடத்தியதில் பல உண்மைகள் வெளிவந்துள்ளது.

இது தொடர்பாக போலீசார் தெரிவித்ததாவது: குடி போதையில் தகராறு செய்த அண்ணனை தம்பி சாபு தாக்கியதில் அவர் மயங்கி உள்ளார். மயக்க நிலையில் இருந்த அண்ணன் பாபுபை அருகே உள்ள  தோட்டத்துக்கு தூக்கி சென்று  தம்பி சாபு உயிரோடு புதைத்து உள்ளார்.

அதனைத்தொடர்ந்து சாபுவை கைது செய்த போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்து உள்ளனர். தற்போது அண்ணன் பாபு புதைக்கப்பட்ட இடத்தில் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர் மேலும் சாபுவிடம் விசாரணை மேற்கொண்டுவருகிறோம் என்று தெரிவித்தனர்.  

Leave a Comment