உடும்பை கூட விட்டு வைக்காத காம காட்டுமிராண்டி மனித மிருகங்கள்! பாலியல் சித்ரவதை செய்து வீடியோ எடுத்த கொடூரம்..

உடும்பை கூட விட்டு வைக்காத காம காட்டுமிராண்டி மனித மிருகங்கள்! பாலியல் சித்ரவதை செய்து வீடியோ எடுத்த கொடூரம்.. - Daily news

காம காட்டுமிராண்டி மனித மிருகங்கள் சிலர், உடும்பை கூட விட்டு வைக்காமல் கதற கதற பாலியல் சித்ரவதை செய்து, அதனை வீடியோ எடுத்த சம்பவம், கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் தான் இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

மஹாராஷ்டிரா மாநிலம் கோதேன் கிராமம் அருகே ஷாய்தரி புலிகள் காப்பக வனப்பகுதி இருக்கிறது.

இந்த காட்டுக்குள், அந்த பகுதியைச் சேர்ந்த சிலர் அடிக்கடி இரவு நேரத்தில் சென்று விலங்குகளை தொடர்ச்சியாக வேட்டையாடி, அதனை சமைத்து சாப்பிடுவதை வாடிக்காயக கொண்டிருந்தனர் என்றும் கூறப்படுகிறது.

அந்த வகையில், அந்த பகுதியைச் சேர்ந்த 3 இளைஞர்கள், அந்த வனப்பகுதியைச் சுற்றி சற்று சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றி திரிந்து உள்ளனர்.

அப்போது, அந்த வழியாக வந்த வனத்துறையினர், இவர்களைப் பார்த்து சந்தேகம் அடைந்து அவர்களை அழைத்து விசாரித்து உள்ளனர். 

இதில், அந்த 3 பேருமே, அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. 

அவர்களிடம் அந்த அதிகாரிகள் பேசும் போது, அந்த 3 பேரும் இந்த வனப்பகுதியில் அடிக்கடி விலகுங்களை வேட்டையாடி வந்தது தெரிய வந்தது. 

இதனையடுத்து, அவர்கள் வைத்திருந்த செல்போன்களை வாங்கி வனத்துறை அதிகாரிகள் பரிசோதித்து உள்ளனர்.

அப்போது அவர்களது செல்போனில் இருந்த ஒரு வீடியோவை பார்த்து, அவர்கள் கடும் அதிர்ச்சியும், பீதியும் அடைந்து உள்ளனர்.

இதனால், மிரண்டுபோன அவர்கள், அவர்களிடம் இது குறித்து விசாரித்து உள்ளனர்.

அப்போது, “கடந்த சில வாரங்களுக்கு முன்பு, இதே காட்டுப்பகுதிக்கு சென்ற இவர்கள் 3 பேரும், அங்கிருந்த ஒரு பெரிய வகை உடும்பை எப்படியோ பிடித்து, அதனை கட்டிவைத்து, எந்த வித பயமும் இன்றி அந்த உடும்பை அவர்கள் 3 பேரும், மிகவும் கொடூரமான முறையில் காம வெறியர்களைப் போல் பாலியல் வன்புணர்வு செய்து, மனித மிருகங்களாக மாறி உள்ளனர். 

இந்த கொடூரமான செயலை, அவர்கள் தங்களது சொல்போனில் வீடியோவும் எடுத்து வைத்துக்கொண்டனர்.

முக்கியமாக, “மறுபடியும் அந்த உடும்பை பாலியல் வன்புணர்வு செய்ய, அதே உடும்பை தேடி மீண்டும் இந்த காட்டுக்குள் சுற்றி திரிந்து வந்து” உள்ளனர்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த வனத்துறை அதிகாரிகள், இந்த காம வெறியர்களை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அவர்களை சிறையில் அடைத்து உள்ளனர்.

மிக முக்கியமாக, விலங்குகளை பாலியல் பலாத்காரம் செய்தால், அவர்கள் மீது எந்த வகையான தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியலாம் என்பது குறித்து சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை நடத்தி வருவதாகவும், அப்படி, இவர்கள் மீதான இந்த பாலியல் குற்றம் நிரூபிக்கப்பட்டால் இவர்களுக்கு 7 வருட வரை மிக கடுங்காவல் தண்டனை கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதனிடையே, 3 பேர் சேர்ந்து உடும்பை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment