கொரோனா தடுப்பூசியின் உலகளாவிய தேவை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே போகிறது. எந்தவொரு தடுப்பூசியும் அல்லது நிறுவனமும் மட்டுமே, உலகளாவிய தேவையை பூர்த்தி செய்ய முடியாது என்று சனோஃபி பாஸ்டரின் நிர்வாக துணைத் தலைவர் தாமஸ் ட்ரையம்பே கூறியுள்ளார். இருப்பினும், தடுப்பூசிகள் மட்டுமே முழுமையான தீர்வாக இருக்காது என்று, உலக சுகாதார நிறுவனமும் அறிவித்திருந்தது.

இருப்பினும் தடுப்பூசிக்கான பணிகள் வேகமாகவும் விரைவாகவும் செய்யப்படு வருகிறது. உலகளைவில் 150 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தடுப்பூசி கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்தியாவிலும் கொரோனாவுக்கான பணிகள் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இப்போதைக்கு, இரண்டு தடுப்பூசிகள் மனித சோதனைகளுக்குள் இறங்கியுள்ளது

மேலும் அமெரிக்க பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் பைசர் இன்க் ஒரு தடுப்பூசி அக்டோபர் பிற்பகுதியில் விநியோகிக்க தயாராக இருக்கும் என்று கூறியது. நவம்பர் 3-ம் தேதி நடைபெறும் அமெரிக்க தேர்தலுக்கு சற்று முன்னதாகவே இது கிடைக்கும் என்று கூறப்பட்டது.

ஆனால் நேற்றைய தினம் ஜெனீவாவில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் உலக சுகாதார அமைப்பின் செய்தி தொடரபாளர் மார்கரெட் ஹாரிஸ் தடுப்பூசிகளின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு குறித்த கடுமையான சோதனைகளின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தி உள்ளார்.
 
மேலும் அவர் கூறும்போது ‘‘அடுத்த ஆண்டு நடுப்பகுதி வரை கொரோனாவுக்கு எதிராக பரவலான தடுப்பூசிகளை உலக சுகாதார நிறுவனம் எதிர்பார்க்கவில்லை. மேம்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் தடுப்பூசிகள் எதுவும் இதுவரை உலக சுகாதார அமைப்பால் கோரப்பட்ட குறைந்தது 50 சதவீத அளவு செயல்திறனின் தெளிவான சமிக்ஞையை நிரூபிக்கவில்லை.

3-வது கட்ட சோதனைக்கு அதிக காலம் எடுக்க வேண்டும், ஏனென்றால் தடுப்பூசி எவ்வளவு பாதுகாப்பானது என்பதை நாம் உணர வேண்டும், மேலும் அது எவ்வளவு பாதுகாப்பானது என்பதை நாங்கலும் காண வேண்டும்.

இது மக்களிடையே பெரிய மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படும் தடுப்பூசி ஆராய்ச்சியின் கட்டத்தைக் குறிக்கிறது.

சோதனைகளின் அனைத்து தரவையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். நிறைய பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது, தடுப்பூசி செயல்படுகிறதா என்பது எங்களுக்குத் தெரியாது. இந்த கட்டத்தில் அது பயனுள்ள செயல்திறன் மற்றும் பாதுகாப்பின் அளவைக் கொண்டிருக்கிறதா இல்லையா என்பதற்கான தெளிவான சமிக்ஞை எங்களிடம் இல்லை என கூறினார்.

உலக சுகாதார அமைப்பும் கவி தடுப்பூசி கூட்டணியும் இணைந்து கோவாக்ஸ் எனப்படும் உலகளாவிய தடுப்பூசி ஒதுக்கீடு திட்டத்தை முன்னெடுத்து வருகிறது, இது தடுப்பூசிகளை நியாயமான முறையில் வாங்கவும் விநியோகிக்கவும் உதவும். சுகாதாரப் பணியாளர்கள் போன்ற ஒவ்வொரு நாட்டிலும் அதிக ஆபத்து உள்ளவர்களுக்கு முதலில் தடுப்பூசி போடுவதில் கவனம் செலுத்தப்படுகிறது.

இதன்மூலம் அவர், ``தடுப்பூசியில் தேசியவாதத்தை பின்பற்றுவது கொரோனா தொற்றை அதிகரிக்க வழிவகுக்குமே தவிர குறைக்காது" என்று தெரிவித்துள்ளார்.

இதில் தடுப்பூசி தேசியவாதம் என்றால் என்ன என்பது பற்றி நாம் யோசிக்கலாம். அடிப்படையில், கொரோனா வைரஸ் தடுப்பூசி கண்டுபிடிப்பிற்கு இன்னும் காலம் ஆகும். ஆனால் தடுப்பூசிகள் விநியோகத்திற்கு, இப்பொழுதே முன்கூட்டியே நாடுகள் அனைத்தும் முன்பதிவு செய்ய துவங்குகின்றன. சில நாடுகள் பில்லியன் டாலர்களுக்கு மேல், தடுப்பூசியின் முடிவு தெரியாமலேயே, முதலீடு செய்துள்ளனர். இது தடுப்பூசியின் விலை மற்றும் அணுகலுக்கான கேள்விகளை உருவாக்குகிறது. பொருளாதார ரீதியலான இந்த அனுகுமுறை, தடுப்பூசி தேசியவாதம் எனப்படுகிறது. இந்த மாதிரியான அனுகுமுறைகள், கண்டறியப்படும் தடுப்பூசியை மக்களை போய் சேர்வதை கேள்விக்குறியாக்கும்.