இங்கிலாந்து தடுப்பூசிக்கான ஆய்வு, தமிழகத்தில்! - முதல்வர் அனுமதி

இங்கிலாந்து தடுப்பூசிக்கான ஆய்வு, தமிழகத்தில்! - முதல்வர் அனுமதி - Daily news

கொரோனா தடுப்பூசியின் உலகளாவிய தேவை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே போகிறது. எந்தவொரு தடுப்பூசியும் அல்லது நிறுவனமும் மட்டுமே, உலகளாவிய தேவையை பூர்த்தி செய்ய முடியாது என்று சனோஃபி பாஸ்டரின் நிர்வாக துணைத் தலைவர் தாமஸ் ட்ரையம்பே கூறியுள்ளார். இருப்பினும், தடுப்பூசிகள் மட்டுமே முழுமையான தீர்வாக இருக்காது என்று, உலக சுகாதார நிறுவனமும் அறிவித்திருந்தது.

இருப்பினும் தடுப்பூசிக்கான பணிகள் வேகமாகவும் விரைவாகவும் செய்யப்படு வருகிறது. உலகளைவில் 150 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தடுப்பூசி கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்தியாவிலும் கொரோனாவுக்கான பணிகள் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இப்போதைக்கு, இரண்டு தடுப்பூசிகள் மனித சோதனைகளுக்குள் இறங்கியுள்லது.


 
அவை அகமதாபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஜைடஸ் கேடிலா நிறுவனத்தின் ஜைகோவ்-டி மற்றும் ஐதராபாத்தை தலைமையகமாக கொண்டு இயங்கும் பாரத் பயோடெக் நிறுவனத்தாரின் கோவேக்சின் ஆகும்.

இந்தியாவின் பணிகள் ஒருபக்கம் இருந்தாலும், இப்போதைக்கு உலகளவில் முதலிடத்தில் இருக்கும் தடுப்பூசி தயாரிப்பு நிறூவனமாக இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனம். இவர்களின் தடுப்பூசிதான் முதலில் சந்தைக்கு விற்பனைக்கு வரும் என்று உலக சுகாதார நிறுவனமேவும் எதிர்ப்பார்க்கிறது. இந்நிலையில் இந்த தடுப்பு மருந்தை இணைந்து உருவாக்கி, இந்தியாவில் கோவிஷீல்டு என்று அழைக்கப்படுகிற தடுப்பூசியின் 2-வது மற்றும் 3-வது கட்ட சோதனைகளை புனேயை சேர்ந்த இந்திய சீரம் இன்ஸ்டிடியுட் அடுத்த சில நாட்களில் நடத்த உள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட 1,600 பேருக்கு 17 இடங்களில் இந்த தடுப்பூசி போட்டு சோதிக்கப்படுகிறது.

பரிசோதனைகள் முடிவில், பாசிட்டிவாக ரெஸ்பான்ஸ் வந்தால், அதன் பின்னர் அக்டோபர் மாதம் கோவிஷீல்டு தயாரிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தயாரிப்பு பணியையும், சீரம் நிறுவனமே ஒப்பந்தம் செய்துள்ளது.

இதன்படி 2021-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் வசிக்கும் பத்து கோடி பேருக்கு தடுப்பு மருந்து கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும், உலக வங்கியால் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் (LMIC) கொண்ட நாடுகளாக வரையறுக்கப்பட்ட நாடுகளுக்கு, தடுப்பூசியின் விலையை 3 டாலர்கள் (ரூபாய் மதிப்பில் 225) என்ற அளவில் விலை நிர்ணயம் செய்யும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக சீரம் இன்ஸ்டிடியூட் தெரிவித்துள்ளது.

இந்த பரிசோதனை நல்லபடியாக முடிந்து, சீரம் நிறுவனம் தயாரிப்பு பணியை கையில் எடுத்தால், உலகமே விரைவில் கொரோனாவிலிருந்து விடுபடும் என்று நம்பிக்கையோடு நாம் எதிர்ப்பார்க்கலாம்.

தடுப்பூசிக்கான பரிசோதனைகள் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில், இந்த தடுப்பூசியை தமிழகத்தில் பரிசோதனை செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்றைய தினம் உத்தரவிட்டுள்ளார். முதல் கட்டமாக, சென்னையில் 300 பேரிடம் கோவிஷீல்டு செலுத்தி பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. கொரோனா தடுப்பு மருந்து சோதனைகள் பரிசோதிக்கப்பட்டு விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் பரிசோதனை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக ரஷ்யா, தான் ஒரு தடுப்பூசியை கண்டறிந்துவிட்டதாக கூறியிருக்கிறது. இருப்பினும், அதன் பாதுகாப்புத்தன்மையில் நிறைய சிக்கல் இருப்பதால் அது இன்னமும் பொது வெளியில், நாடுகள் மத்தியில் ஏற்றுக்கொள்ளப்படாமல் இருக்கிறது.

Leave a Comment