கொரோனா வைரஸை எதிர்ப்பதற்கு நல்ல நோய் எதிர்ப்பு சக்தி முக்கியமானது என்ற அடிப்படையில், பாரம்பரிய மருத்துவ முறையைப் பயன்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுவது குறித்த விரிவான நெறிமுறையை இந்திய அரசு நேற்றைய தினம் வெளியிட்டுள்ளது.

ஆயுர்வேத ஏ.ஐ.ஐ இந்தியா நிறுவனம், ஆயுர்வேதத்தில் முதுகலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஆயுர்வேதத்தில் உள்ள ஆயுர்வேத மத்திய ஆராய்ச்சி கவுன்சில், யோகா மற்றும் இயற்கை மருத்துவ ஆராய்ச்சி மையம் மற்றும் பிற தேசிய ஆராய்ச்சி நிறுவனங்களின் நிபுணர் குழுக்கள் ஒரு ஒருமித்த ஆவணத்தை உருவாக்கியுள்ளது. இந்த நெறிமுறை லேசான கோவிட்-19 ஐ நிர்வகிப்பதற்கானது.

மத்திய அரசு வெளியிட்டிருக்கும் கோவிட்-19 க்கான ஆயுஷ் தரநிலை சிகிச்சை நெறிமுறையைத் தொடங்குவதற்கு அனுமதி அளித்திருக்கும் மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தனிடம், இந்திய மருத்துவ சங்கம் (IMA) தனது கேள்விகளுக்கு பதில் அளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. 

இதுதொடர்பாக மருத்துவச் சங்கம் கூறியிருக்கும் தகவல்கள் பின்வருமாறு :

``சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தனது ஆயுஷ் ஆயுர்வேத சிகிச்சைக்கு ஆதரவாக நிறுவனங்களின் சுவாரஸ்யமான பெயர்களை கோடிட்டு காட்டுகிறார். இவை அனுபவச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டவை என்பதை அவர் ஒப்புக்கொள்கிறார். இருப்பினும் சான்றுகள் தனிப்பட்ட அனுபவம் மற்றும் தனிப்பட்ட அகநிலை அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டவை என்று அவர் ஒப்புக்கொள்கிறார். ஆகவே விஞ்ஞான நீதியில் நிரூபிக்கப்படாமல் ஒரு சிகிச்சை முறை அனுபவத்தில் அடிப்படையில் ஆனதாக இருக்கலாமா? அவர் சில கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். இல்லையெனில், அவர் தேசத்தில் மக்களை ஆபத்தில் தள்ளுகிறார் என்பதாக பொருள் கொள்ளப்படும்” என தெரிவித்துள்ளது.

மருத்துவ சங்கம் சார்பில் எழுப்பப்பட்டிருக்கும் கேள்விகள் இங்கே :

1. ஆயுஷ் அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள மருத்துவத்தில்  குணமடைதலுக்கு திருப்திகரமான ஆதாரம் உள்ளதா? அப்படி இருந்தால், அது பலவீனமாக உள்ளதா, அல்லது நடுத்தர நிலையில் உள்ளதா அல்லது வலுவாக உள்ளதா?

2. கோவிட் -19-இன் தீவிரமான நிலை, ஹைபர் இம்யூன் நிலையில் உள்ளதா அல்லது நோய் எதிர்ப்பு திறன் குறைவாக இருப்பதால் உள்ளதா?

3. கோவிட் சிகிச்சைக்கு ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரைக்கும் மருந்துகளை எடுத்துக்கொள்ள, அமைச்சகத்தைச் சேர்ந்த தன்னார்வலர்கள் தயாராக இருக்கிறார்களா?

4. பரிந்துரைக்கப்பட்ட சிகிச்சை முறைகளில் ரீதியில், சுகாதாரத்துறையைச் சேர்ந்த எத்தனை பேர் சிகிச்சை மேற்கொள்வதற்கு தயாராக இருக்கிறார்கள்?

5. கொரோனா சிகிச்சை மற்றும் நோய் தடுப்பு ஆயுஷ் அமைச்சகத்துக்கே கொடுப்பதிலிருந்து சுகாதாரத்துறை அமைச்சரை எது தடுக்கிறது?

முன்னதாக கொரோனா நோய்த்தடுப்பு மற்றும் சிகிச்சைக்கான ஆயுஷ் மருந்துகளுடன், ஆயுஷ்- சி.எஸ்.ஐ.ஆர் கூட்டு ஆய்வுகள் தொடங்கப்பட்டதாகவும், கட்டுப்பாட்டு மண்டலங்களில் இலக்கு வைக்கப்பட்ட மக்கள்தொகையில் ஆயுஷ் தலையீடுகளின் முற்காப்பு குறித்த அமைச்சகத்தின் கீழ், ஆயுஷ் ஆராய்ச்சி கவுன்சில்கள் மற்றும் தேசிய நிறுவனங்கள் மூலம் பெரிய அளவிலான மக்கள் தொகை அடிப்படையிலான ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும், மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆயுர்வேத பயிற்சியாளர்கள் இப்போது அறிகுறியற்ற நோயாளிகளுக்கு மருந்துகளை வழங்குகின்றனர். இந்தியாவில் கொரோனா வைரஸின் லேசான அறிகுறிகள் உள்ளவர்கள், வைரஸின் நோய்த்தடுப்பு மற்றும் மேலாண்மைக்கான புதிய மருத்துவ மேலாண்மை நெறிமுறையை, தற்போது சுகாதார அமைச்சகம் மற்றும் ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.